Tuesday, April 20, 2010


இணைய உலகத்தில் கிடைக்கும் அனைத்து வீடியோக்களையும் சேமிக்கலாம்

April 20, 2010

இணையத்தில் ஆங்கில மொழி அறிவை வளர்க்கும் வீடியோவில்
இருந்து பல தரப்பட்ட பயன்தரும் வீடியோக்கள் இணையதளத்தில்
கிடைக்கின்றன அவ்வாறு இணையதளங்களில் கிடைக்கும்
வீடியோவை எப்படி சேமிக்கலாம் என்பதைப்பற்றிதான் இந்த பதிவு.

படம் 1

முக்கியமான வீடியோ இணையதளங்களில் இருந்து வீடியோவை
எந்த மென்பொருளும் இல்லாமல் உடனடியாக தரவிக்கி நம்
கணினியில் சேமிக்கலாம் இன்று பிரபலமாக இருக்கும் யூடியுப்,
மெட்டாகேபே,டெய்லிமோஸன்,வேகொ,பிளிக்கர் மற்றும் கூகுள்
வீடியோ இணையதளங்களில் இருந்து வீடியோ பக்கத்தின் யூஆரெல்
முகவரியை மட்டும் கொடுத்து நாம் நம் கணினியில் சேமித்து
வைத்துக்கொள்ள புதிதாக ஒரு இணையதளம் வந்துள்ளது.

இணையதள முகவரி : http://savevideo.me

இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் தரவிரக்க விரும்பும்
இணையதளத்தின் முகவரியை கொடுத்து Download என்ற
பொத்தானை அழுத்தி வீடியோவை நம் கணினியில் தரவிரக்கிக்
கொள்ளலாம். ( படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது) உதாரணமாக நாம்
யூடியுப்-ன் யூரெல் முகவரியை கொடுத்துள்ளோம். நாம் தரவிரக்க
கொடுத்திருக்கும் யூடியுப்-ன் வீடியோவின் திரையையும் (screenshot)
நமக்கு காட்டும். கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு
பயனுள்ளதாக இருக்கும்.

வின்மணி சிந்தனை
பசிக்கும் ஏழைக்கு உணவு கொடுக்க முடியவில்லை என்றால்,
நாட்டில் தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்து என்ன செய்ய ?

வினாக்கள் மற்றும் பதில்கள்

1.அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச்சொல் எது ?
2.இந்தியாவின் மிக உயரிய வீர விருது எது ?
3.காப்பர் நாடு எது ?
4.பாலைவனங்களில் காணப்படும் செடி வகை யாது ?
5.ஆபரணங்களில் தங்கத்தை விட விலை உயர்ந்தது எது ?
6.உலகிலேயே சில்க் அதிகமாக ஏற்றுமதி ஆகும் நாடு எது ?
7.இந்தியாவில் தொலைபேசி தயாரிப்பில் புகழ் பெற்ற நகரம் எது?
8.ஆமைகளை பிடிப்பதற்கு பயன்படும் மீன் எது ?
9.கங்காரு குட்டி பிறந்ததும் அதன் நீளம் என்ன ?
10.பாலைத் தயிராக்கும் பாக்டீரியா எது ?

பதில்கள் :
1. தி ( The),2.பரம்வீர் சக்ரா, 3.ஷாம்பியா,
4.காக்டஸ்,5.பிளாட்டினம்,6.சீனா,7.பெங்களுர்
8.ஸக்கர் மீன்கள், 9. 2.5 செ.மீ, 10.லாக்டோ பாஸிலஸ்
இன்று ஏப்ரல் 20 
பெயர் : சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்
பிறந்த தேதி : ஏப்ரல் 20, 1910

மணிக்கொடிக் கால எழுத்தாளர், திரைப்பட
விமர்சகர், பட்டதாரி ஆசிரியர். அகில இந்திய
வானொலியின் இதழ்ப் பொறுப்பாசிரியராகவும்
முதுநிலை நிருபராகவும் 1968 வரை பணி
புரிந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப்
பேராசிரியர்.ஆதியூர் அவதானி - முதல் தமிழ்க் கவிதை
நூலை வெளியிட்டவர்

Tuesday, April 13, 2010



வினாக்கள் மற்றும் பதில்கள்
1. குதிக்கத் தெரியாத மிருகம் எது ?
2. இந்திய நாட்டின் முதல் கற்கோவில் எது ?
3. உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது ?
4. வெள்ளை யானை எந்த நாட்டில் காணப்படுகிறது ?
5. இசைத்தட்டை கண்டுபிடித்தவர் யார் ?
6. எளிமையான அமினோ அமிலம் எது ?
7.சனியின் பெரிய கோள் எது ?
8. உலகிலேயே மிகப்பெரிய கடிகாரம் எது ?
9. ரஞ்சி கோப்பைக்கான போட்டி தொடங்கிய ஆண்டு ?
10. இரண்டு இடைவேளைகளை கொண்ட படம் எது ?

பதில்கள்:
1.யானை,2.காஞ்சி கைலாசநாதர் கோவில்,3. இந்தியா,
4.தாய்லாந்து,5.பீட்டர் கோல்ட்மார்க்,6.கிளைசின்
7.டைட்டான்,8.பிக்பென் - இங்கிலாந்து,9.1934,
10.சங்கம்
இன்று ஏப்ரல் 12
பெயர் :பிராங்கிளின் டெலானோ ரூஸ்வெல்ட்
மறைந்த தேதி : ஏப்ரல் 12, 1945

32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்.
அரசுத் தலைவராக 1933 முதல் 1945 வரை
நான்கு முறை இவர் தெரிவுசெய்யப்பட்டார். இரு
தடவைகளுக்கு மேல் அமெரிக்கத் தலைவராகத்
தெரிவுசெய்யட்டவர் இவர் ஒருவரே. உலகளாவிய பொருளாதார
நெருக்கடி, மற்றும் இரண்டாம் உலகப்போர் ஆகியவற்றில்
நேரடிப் பங்கு வகித்தவர். ஐக்கியஅமெரிக்காவின் மூன்று
முக்கிய குடியரசுத் தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.


-------------------------------------------------------------------------..

  • 12. Ilakkuvanar Thiruvalluvan | April 13, 2010 at 11:00 பிற்பகல்

    Your comment is awaiting moderation.

    தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் எனும் அறிஞர்களின் வே்ண்டுகோளை ஏற்று தமிழக அரசு நடைமுறைப்படுத்திய பின்பும் சி்த்திரை முதல்நாளைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாக அறிவிப்பது ஏன்?

    கிறித்துவ ஆண்டின் தொடக்கம் சனவரி முதல் நாளுக்கு மாறிய பின்பும் ஏப்பிரல் முதல்நாளை ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடியவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்றனர். அது போல் சித்திரை முட்டாள்களை உருவாக்க எண்ணுகிறீர்களா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

    பதில்

வினாக்கள் மற்றும் பதில்கள்
1. இந்திய மண்ணில் நுழைந்த முதல் ஐரோப்பியர் யார் ?
2. உலகச் சுற்றுச்சுழல் தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ?
3. ஒட்டகப்பறவை என்று எதை கூறுவார்கள் ?
4. ஆயிரம் ஏரிகள் நாடு என்று அழைக்கப்படும் நாடு எது ?
5. கப்பல் பயணத்தூரத்தை எப்படி கணக்கிடுகிறார்கள் ?
6. உடம்பிலுள்ள எலும்புகளில் மிக நீளமான எலும்பு எது ?
7. உலகில் தோன்றிய முதல் தாவரங்கள் எவை ?
8. நாய்க்கு எத்தனை பற்கள் உண்டு ?
9. உலகில் அதிகம் இரப்பர் கிடைக்கும் நாடு எது ?
10. உலகில் எத்தனை மக்கள் சீன மொழி பேசுகின்றனர் ?

பதில்கள்:
1.அலெக்ஸாண்டர்,2.ஜீன் 5, 3.நெருப்பு கோழி,
4.பின்லாந்து,5.நாட்டிகல்,6.தொடை எலும்பு
7.நீலப்பச்சைப் பாசி,8.நாற்பத்தி இரண்டு,9.மலேசியா,
10. 975 மில்லியன் மக்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலகின் சர்க்கரை கிண்ணம் எது ?
2.சைக்கிளை கண்டுபிடித்தவர் யார் ?
3.பட்டுப்புழுக்களின் உணவு எது ?
4.பாரதியார் சமாதி எங்குள்ளது ?
5.பாலிஸ் என்றால் என்ன ?
6.இந்தியாவில் மிளகுக்கு புகழ் பெற்ற இடம் எது ?
7.சீஸ்மொகிராப் கருவி எதை அளக்க பயன்படுகிறது ?
8.பூனை எத்தனை மாதங்களில் கூட்டி ஈனும் ?
9.சிறுவாணி அணை எங்குள்ளது ?
10.காமராஜரின் அரசியல் குரு யார் ?

பதில்கள்:
1.கியூபா,2.மெக்மில்லன், 3.முசுக்கொட்டை,
4.பாண்டிச்சேரி,5. நகர அரசு,6.கேரளா,7.நிலநடுக்கம்
8.மூன்று மாதங்களில், 9.கோயம்புத்தூர்,10.சத்திய மூர்த்தி

++++++++++++++
இன்று ஏப்ரல் 18
பெயர் : ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
மறைந்த தேதி : ஏப்ரல் 18, 1955

பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட
ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார்.
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான
அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார்.
இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன்
குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை
(statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய
துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

+++++++++++++++++++++++++++++++
வினாக்கள் மற்றும் பதில்கள்
1. மிக நீண்டகாலம் உயிர்வாழும் பிராணி எது ?
2. மக்மகான் எல்லைக்கோடு எந்த நாடுகளைப் பிரிக்கிறது ?
3. ஒரு காசுக்குகூட நோட்டு அச்சடித்து வெளியீடும் அரசு எது ?
4. இந்தியாவின் முதல் வைசிராய் யார் ?
5. தீபநகரம் என்றழைக்கப்படும் நகரம் எது ?
6. இந்திய இருப்புப்பாதையின் மொத்த நீளம் எது ?
7. இந்தியா முதன்முதலில் அனுவெடிப்பு சோதனை நடத்திய
இடம் எது ?
8. முந்திரி உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கும்
நாடு எது?
9. ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு எது ?
10. பட்டாம் பூச்சிகளின் சரணாலயம் எது ?

பதில்கள்:
1. திமிங்கலாம்,2.இந்தியா - சீனா, 3.ஹாங்காங்,
4.கானிங் பிரபு,5. மைசூர்,6.60 ஆயிரம் கி.மீ

வினாக்கள் மற்றும் பதில்கள்
1. மிக நீண்டகாலம் உயிர்வாழும் பிராணி எது ?
2. மக்மகான் எல்லைக்கோடு எந்த நாடுகளைப் பிரிக்கிறது ?
3. ஒரு காசுக்குகூட நோட்டு அச்சடித்து வெளியீடும் அரசு எது ?
4. இந்தியாவின் முதல் வைசிராய் யார் ?
5. தீபநகரம் என்றழைக்கப்படும் நகரம் எது ?
6. இந்திய இருப்புப்பாதையின் மொத்த நீளம் எது ?
7. இந்தியா முதன்முதலில் அனுவெடிப்பு சோதனை நடத்திய
இடம் எது ?
8. முந்திரி உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் வகிக்கும்
நாடு எது?
9. ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு எது ?
10. பட்டாம் பூச்சிகளின் சரணாலயம் எது ?

பதில்கள்:
1. திமிங்கலாம்,2.இந்தியா - சீனா, 3.ஹாங்காங்,
4.கானிங் பிரபு,5. மைசூர்,6.60 ஆயிரம் கி.மீ
7.ராஜஸ்தான்,8. இந்தியா, 9.காளைச்சண்டை,10.மெக்சிகோ
7.ராஜஸ்தான்,8. இந்தியா, 9.காளைச்சண்டை,10.மெக்சிகோ
+++++++++++++++++++++++++++
இன்று ஏப்ரல் 17
பெயர் : தீரன் சின்னமலை
பிறந்த தேதி : ஏப்ரல் 17, 1756

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.
கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போராட்ட
வீரர்.இளைஞர்களுக்கு விடுதலைப்போராட்டத்தில்
நம் தேசத்தின் பெருமையை எழுச்சிமிகு
ஊட்டியவர். இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த
பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம்
கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க
துணிந்து எதிர்த்து செயல்பட்டவர். உங்களால் பாரத
தேசத்திற்கு பெருமை.

++++++++++++++++++++++++++++
வினாக்கள் மற்றும் பதில்கள்
1. நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது ?
2. சைக்கிள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் முதல் நாடு ?
3. பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார் ?
4. ராடர் கருவியை கண்டுபிடித்தவர் யார் ?
5. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முதல் ஜனாதிபதி யார் ?
6. புனித வெள்ளி அன்று கொலை செய்யப்பட்ட அமெரிக்க
ஜனாதிபதி யார் ?
7. எகிப்தின் வெள்ளைத் தங்கம் எது ?
8. நீந்தத் தெரியாத மிருகம் எது ?
9.1980 ஆம் ஆண்டு அர்ஜூனாவிருது பெற்ற கிரிக்கெட்வீரர் யார்?
10. திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது எது ?

பதில்கள்:
1.நார்வே,2.சீனா, 3.முகம்மது அலி ஜின்னா,
4.ஆர்.வாட்சன்வாட்,5. ஜார்ஜ் வாஷிங்டன்,6.ஆப்ரகாம் லிங்கன்
7.பருத்தி,8.ஒட்டகம், 9.கபில்தேவ்,10.பெட்ரோலியம்

++++++++++++++++++++++
இன்று ஏப்ரல் 16
பெயர் : சார்லி சாப்ளின்
பிறந்த தேதி : ஏப்ரல் 16, 1889

ஹாலிவுட் திரையுலகின் மிகப்புகழ் பெற்ற
கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர்,
இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர்,
திரைப்பட தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர்
என்று பல பரிணாமங்கள் உண்டு. நகைச்சுவையில்
தனக்கென்று தனி முத்திரை பதித்தவர்.

+++++++++++++++++++++++++++++++++++++++
வினாக்கள் மற்றும் பதில்கள்
1. உலகில் மிக அதிகமாக பேசப்படும் மொழி எது ?
2. பச்சையம் இல்லாத தாவரம் எது ?
3. மேட்டூர் அனையின் வேறு பெயர் என்ன ?
4. மனித உரிமைதினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ?
5. ரேடியோ அலைகளின் வேகம் மணிக்கு எத்தனை கி.மீ ?
6. ஏரி மாவட்டம் என்பது எது ?
7. ஜெய்ஹிந்த் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது ?
8. ஒரு தீக்கோழியின் முட்டை எத்தனை கோழி
முட்டைகளுக்குச் சமம் ?
9. கணித மேதை இராமானுஜம் பிறந்த ஊர் எது ?
10. மிக உயரமான எரிமலை எது ?

பதில்கள்:
1.சீன மொழி,2.காளான், 3.ஸ்டான்லி அனை,
4.டிசம்பர் 10,5.3 இலட்சம்,6.செங்கல்பட்டு
7.முண்டக உபநிடதம்,8.30 கோழிமுட்டைகளுக்கு சமம்,
9.கும்பகோணம்,10. கேடபாக்சி
++++++++++++++++++++++++++++++++++++++++++

ன்று ஏப்ரல் 14
இன்று ஏப்ரல் 14

பெயர் : இரமண மகரிஷி
மறைந்த தேதி : ஏப்ரல் 14, 1950

தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார்.
அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர்
திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். இங்கு
அமைந்துள்ள, 'ரமண ஆசிரமம்', உலகப் புகழ்
பெற்றதாகும். இன்றளவும், ஆன்ம முன்னேற்றம் பெற
உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பலர் அன்றாடம்
இரமணாசரமத்தினை நாடி வந்த வண்ணம் உள்ளனர்.
உங்களால் இந்தியாவுக்கு பெருமை.


Saturday, April 10, 2010


வள்ளல் வாழை

கடையெழு வள்ளல்களுள் ஒரு வள்ளல் கூட இன்று இல்லையெனினும், வளளலுக்கு, வள்ளலாக விளங்குவது வாழை மரம். தன்னை பயிர் செய்யவும் எவருக்கும் கிழங்கு முதல் பழம் வரை உள்ள அனைத்து பாகங்களையும் வழங்கி வள்ளலின் இடத்தை பிடிக்கின்றது. வாழைக்கனி பண்டைத்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் முக்கனிகளுள் ஒன்று. வாழை மரம் இல்லாத வாழை மரம் இல்லாத மங்கல நிகழ்ச்சிகளே இல்லை எனலாம். எல்லா நிகழ்ச்சிக்கும் அலங்கார தோரணமாக விளங்குகிறது. தென்னை, பனை போன்று மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவையாக இருப்பதால் இஃது பெரும்பாலான பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

வாழைப்பழ ஏற்றுமதியில் தென் இந்தியா முதலிடம் வகிக்கிறது. குமரி மாவட்டத்தில் நெல் பயிராகி வந்த இடங்கள் கூட இன்று வாழை தோட்டங்களாக மாற்றப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். இம்மரம் விவசாயிகளின் 'கற்பகத் தருவாக' விளங்குகிறது. வண்டல் மண் நிறைந்த இடத்தில் செழிப்பாக வளரும் இம்மரம் மற்ற நிலங்களிலும் வளரும் தன்மை கொண்டது. இதன் வகைகளுக்கேற்றவாறு இதன் உயரமும், ஆயுட்காலமும் அமைந்திருக்கும்.

வாழை மரத்தின் தாவரவியல் பெயர் - Musa Paradisiaca. இது Musaceae என்னும் குடும்பத்தை சார்ந்தது. இதன் ஆங்கில பெயர் - Plantain tree இதனை மலையாளத்தில் வாழா என்றும் சமஸ்கிருதத்தில் கதலி என்றும் அழைக்கின்றனர்.

வாழை மரத்தின் ஒவ்வொரு பாகத்திற்கும் மருத்துவ குணங்களும் பிற பயன்களும் உள்ளன. இம்மரத்தில் பல வகைகள் காணப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் குறிப்பாக செவ்வாழை, இரசதாளி, வாழை, நேந்திர வாழை, பேயன் வாழை போன்றன பயிரிடப்படுகின்றன.

பிற மாவட்டங்களில் அடுக்குவாழை, கருவாழை, கொட்டை வாழை, நவரை வாழை, மலை வாழை, மொந்தன் வாழை, வெள் வாழை போன்றனவும் இன்னும் சிலவும் பயிராகின்றது. இவற்றின் கனிகளின் தன்மை மட்டும் மாறுபட்டு காணப்படும். அவற்றின் மருத்துவ குணங்களும் மாறும்.

வாழை கிழங்கு - வாழை மரத்தின் கருவாக இருப்பது. ஒரு கிழங்கை நாம் பயிர் செய்தால் அது வாழையடி வாழையாய் நமக்கு பயன் தந்து கொண்டே இருக்கும். இதற்குள்ள மருத்துவ பயனை பற்றி பார்த்தால் நமக்கு சற்று வியப்பாக தான் இருக்கும்.

இக்கிழங்கை இடித்து பிழிந்த சாற்றினை குடித்து வர சிறுநீர் எரிச்சல், சிறுநீரில் இரத்தம் கலந்து வரல், பாண்டு நோய், எலும்புருக்கி நோய் முதலியவற்றிலிருந்து நாம் நம்மை விடுவித்து கொள்ளலாம்.

வாழை பட்டை - இது உலர்ந்தபின் இதிலிருந்து எடுக்கப்படும் நார் பைகள் செய்யவும், துணிகள் நெய்யவும், பூக்கள் தொடுக்கவும் பயன்படுகிறது. மேலும் இதிலிருந்து எடுக்கப்படும் ஒருவித உப்பு சிறுநீர் பெருக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

வாழை இலை என்று சொன்னாலே நமக்கெல்லாம் ஞாபகத்தில வருவது சாப்பாடு. இதனை நாம் பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். மேலும் தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மேல் படுக்க வைக்கலாம். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும்.

பூ-வாழை மரம் ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடியது. இதன் தண்டின் நடுப்பகுதியிலிருக்கும் பூக்கள் மட்டுமே காய் ஆகும். மற்றவை ஆகாது, இப்பூவினை சமைத்து சாப்பிடுவது வழக்கம். இதனை வியட்னாமில் பச்சையாகவே உண்ணுகின்றார்கள். இவ்வாறு இதனை உண்பதால் சீதக்கழிச்சல், எருவாய்க்கடுப்பு, குருதிமுனை, உடல் கொதிப்பு முதலியன தீரும். இப்பூச்சாற்றினை பனங்கற்கண்டோடு சேர்த்து உட்கொள்ள வயிற்றுப்புண் முதலிய நோய்கள் நீங்கும். மேலும் இது பத்திய உணவாகவும் கொள்ளப்படுகிறது.

வாழைக்காயினை சமைத்து உண்டுவர உடல் வெப்பம், வயிற்றுளைச்சல், வாய் நீரூறல், உமிழ்நீர்ச்சுரப்பு, இருமல் ஆகியன நீங்கும். இது குருதியினை பெருகச்செய்யும். உடலுக்கு வன்மையை யும் அதிக அளவில் உணவில் விருப்பத்தையும் கொள்ளசெய்யும். இதனை நெருப்பிலிட்டு சுட்டு சாப்பிடுவதும் உண்டு. இதனை கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் பல உள்ளன.

நாவிற்கும், மனதிற்கும் இன்பத்தை அள்ளிக் கொடுக்கும் வாழைப்பழத்தின் உபயோகங்கள் பல உள்ளன. ஒரு வாழை பழத்தில் இருக்கும் சத்துக்களை நாம் தெளிவாக தெரிந்து கொண்டால் நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் ஒரு வாழைப்பழத்தில் இத்தனை சத்துக்கள் உள்ளதா என வியக்கத்தான் தோன்றும். ஒரு வாழைப்பழத்தை பற்றி பார்ப்போம். இதில்,

மாவுப்பொருள் - 57கிராம்
நார்ப்பொருள் - 4கிராம்
புரதச்சத்து - 2கிராம்
சர்க்கரை - 10கிராம்
இரும்புச்சத்து - 6கிராம்
சோடியம் - 5மில்லிகிராம்
பொட்டாசியம் - 800மில்லிகிராம்

இத்தகைய சத்துக்கள் ஒவ்வொரு வகைக்கும் சற்று வேறுபடும். இதன் மருத்துவ குணங்களும் சற்று வேறுபட்டே காணப்படும். நாள்தோறும் ஒரு வாழைப்பழம் உண்டுவருவது நமது உடலுக்கு மிகவும் நல்லது. நாம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் நமது உடலுககு 220 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. வாழைப்பழத்திற்கு மலமிளக்கி செய்கை உண்டு. மேலும் இது உடலுரமாக்கி ஆகவும் செயல்படும்.

இப்பழத்தினை உண்பதால் வெப்ப பிணிகள், இரத்தசோகை, மலக்கட்டு, கர்ப்பிணிகளுக்கு வரும் வாந்தி, குன்மம், மன அழுத்தம், நெஞ்செரிவு, மலக்கட்டு முதலியன நீங்கும். உடலின் தோல் பளபளப்பாகும்.

இப்பழத்தின் தோலை கொசு கடித்த இடத்தில் வைத்து தேய்க்க, எரிச்சல் தடிப்பு ஆகியன நீங்கும்.

இவ்வாறு தனது உடல் முழுவதையும் பயனுள்ளதாக்கி நமக்கு வழங்கும் இவ்வள்ளலை வளரச்செய்து பயனடைவோம்.

(நன்றி : புதிய தென்றல் செப்டம்பர் 2007)

Monday, April 5, 2010

1. ஒரு கிராம் கொழுப்பில் எவ்வளவு கலோரிகள் கிடைக்கும் ?
2. FM -ஐ கண்டுபிடித்தவர் யார் ?

3. இண்டெர்நெட்-ஐ பாதித்த முதல் வைரஸ் ?
4. நீர்க்கண்ணாடி என்றால் என்ன ?
5. உலகிலேயே மிக உயரமான விமான நிலையம் எது ?
6. பூமியின் ஒரே கோள் எது ?
7. உலககோப்பையில் 10 ஆட்டங்களில் 27 விக்கெட்களை
கைப்பற்றி புதிய சாதனை படைத்த வீரர் யார் ?
8. இந்தியன் இரயில்வேயில் அதிவிரைவு இரயில் எது ?
9. முதல் தமிழ் கலர் திரைப்படம் எது ?
10. எந்த கொசு இனம் மனிதனைக் கடிக்கின்றது ?
பதில்கள்
1. 9 கலோரிகள், 2.ஆம்ஸ்ட்ராங்,1933, 3.லவ் - பக்,5-5-2000
4. சோடியம் சிலிகேட் , 5. லாசா விமான நிலையம் , தீபெத்.
6. நிலவு ,7.சமிந்தாவாஸ் , 8. சதாப்தி எக்ஸ்பிரஸ்,
9. அலிபாபாவும் 40 திருடர்களும்,10.பெண் கொசு இனம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வினாக்கள் மற்றும் பதில்கள்
1. இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?
2. உலக வாணிப நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது ?
3. இந்தியாவின் இரட்டை நகரம் எது ?
4. தபால் தலையை வட்டவடிவாக வெளியிட்ட நாடு எது ?
5. கவிஞர் ரவீந்திரநாத் நடித்த சினிமா எது ?
6. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரி எது ?
7. சாரணர் இயக்கத்தை ஆரம்பித்தவர் யார் ?
8. ரேடியாவில் பயன்படுத்தப்படும் மின்தடை எதனால் ஆனது ?
9. மிக அறிவு கூர்ந்த பறவை எது ?
10.மூளையில் உள்ள நீயுரான்களின் எண்ணிக்கை யாது ?

பதில்கள்:
1.ஜீவி.மாவ்லங்கர், 2.ஜெனிவா,3.ஹைதராபாத்,செகந்திராபாத்,
4.மலேசியா,5.வால்மீகி பிரதிமா,6.புழலேரி,7.பேடன் பவல் ,
8.கிராபைட்டால் ஆனது, 9.ப்லூடிட் , 10. 1400

Sunday, April 4, 2010

general knowledge question and answers

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1. பின்நோக்கி பறக்கும் பறவை எது ?
2. ரேடியோ கதீர்விச்சை கண்டுபிடித்தவர் யார் ?
3. முதல் வீட்டு கம்ப்யூட்டர் எது ?
4. உலகிலே மிக உயரமான அணை எது ?
5. சூடான கிரகம் எது ?
6. ஜோடி சேர்ந்து சதம் அதிகமாக அடித்த வீரர்கள் ?
7.கிழக்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ?
8.தமிழின் முதல் சமூக படம் எது ?
9.போலர் கரடி எங்கு வசிக்கின்றது ?
10.மிக விரிவான இறக்கை உடைய பறவை எது ?

பதில்கள்
1.ஹம்மிங் பறாவை , 2.கியூரி ,3.கோமா டோர் 20
4. கிராண்ட் டிக்சென்சி , ஸ்விட்சர்லாந்து ,5.புதன்
6.சச்சின் - கங்குலி ,7.கொல்கத்தா ,8.மேனகா ,
9.ஆர்டிக் பிரதேசத்தில் , 10.ஆல்பட்ராஸ்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.குளோரினை கண்டுபிடித்தவர் யார் ?
2.இந்தியாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டரின் பெயர் என்ன ?
3.சக்தியின் அலகு யாது ?
4.உலகிலே மிக உயரமான மலைத்தொடர் எது ?
5.சூரியனின் நான்காவது கிரகம் எது ?
6.உலககோப்பையில் 23 சிக்சர்கள் அடித்த வீரர் யார் ?
7.உலகிலே பெரும்பாலானோருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும்
நிறுவனம் எது ?
8.முதன்முதலில் இந்தியாவில் வெளியிடப்பட்ட திரைப்படம் எது?
9.மிக நீண்ட ஆயுளை உடைய விலங்கு எது ?
10.ஒரு நாளில் இதயம் எத்தனை முறை துடிக்கும் ?

பதில்கள்
1.k.ஷீல்லி , 2.பரம், 3.வாட் , 4.இமாலயம்-29,028 அடி,
5.செவ்வாய் , 6.கங்குலி , 7.இந்தியன் இரயில்வே,
8.ராஜா அரிச்சந்திரா 9.ஆமை , 10. 1,00,000

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வினாக்கள் மற்றும் பதில்கள்
1. இரத்தம் வடிதல் போன்றவற்றால் குறையும் விட்டமின் எது ?
2. பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார் ?
3. கம்ப்யூட்டரின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
4. சக்தி தரும் வெப்பத்தின் அழகு ?
5. உலகிலே மிக உயரமான அருவி எது ?
6. சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகம் எது ?
7. உலககோப்பை கிரிக்கெட் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு
முறை நடத்தப்படுகிறது. ?
8. தெற்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ?
9. வெட்டுக்கிளியை வேட்டையாடும் பறவை எது ?
10. மூளையில் உள்ள நீயூரான்களின் எண்ணிக்கை என்ன ?
பதில்கள்
1.விட்டமின் கே , 2.பிராண்ட், 3.சார்லஸ் பாபேஜ் ,
4.கலோரி, 5. ஏஞ்சல் அருவி ( வெனிசுலா), 6. வியாழன்,
7. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 8. சென்னை
9. மைனா 10. 1400

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்று ஏப்ரல் 3
பெயர் : மார்லன் பிராண்டோ ,
பிறந்த தேதி : ஏப்ரல் 3, 1924

மார்லன் பிராண்டோ ஒரு திரைப்பட நடிகர்.
த கோட்ஃபாதர் உட்பட பல படங்களில்
நடித்தவர். இரு தடவை ஆஸ்கார் விருது
வென்றவர். அமெரிக்காவின் நெப்ரஸ்காவில்
பிறந்தவர். 2004 இல் எண்பது வயதில் மரணமானார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வினாக்கள் மற்றும் பதில்கள்
1. செயற்கை இதயத்தை கண்டுபிடித்தவர் யார் ?
2. ஒளியின் அலகு என்ன ?
3. உலகிலேயே மிக உயரமான தொடர்வண்டி எது ?
4. வட்டமான பாதை கொண்ட கிரகம் எது ?
5. 10 ஆண்டு ஒய்வுக்குப் பின்னர் கிரிக்கெட் விளையாட வந்து
கேப்டன் பதவியும் வகித்த கிரிக்கெட் வீரர் யார் ?
6.உலகின் முதல் மருத்துவமனை சக்கரத்தின் மேல் நடப்பது எது?
7. கதாநாயகன் இல்லாத முதல் தமிழ்த்திரைப்படம் எது ?
8. மிகத்தடிப்பான சருமம் கொண்ட விலங்கு எது ?
9. மிகவும் பொதுவாகக்காணப்படும் இந்தியப் பறவை ?
10.மயிலின் அறிவியல் பெயர் என்ன ?

பதில்கள்
1.வில்லியம் கோல்ப் ,1957 , 2. லக்ஸ், 3.கொண்டோர்
4. வெள்ளி, 5. பாப் சிம்சன் ( ஆஸ்திரேலியா )
6. லைப்லைன் எக்ஸ்பிரஸ், 7.ஒவ்வையார் ,
8. திமிங்கலச்சுறா,9. காகம், 10.பாவாகிரிஸ்டாடஸ்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வினாக்கள் மற்றும் பதில்கள்
1. லேசரை கண்டுபிடித்தவர் யார் ?
2. மின்சாரத்தின் அலகு என்ன ?
3. உலகிலே மிக உயரமான பாலம் எது ?
4. கோள்களே இல்லாத கிரகம் எது ?
5. உலகிலேயே மிக உயரமான தீவு எது ?
6. சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டியை எப்போது
துவக்கினார் ?
7. வடக்கு இரயில்வேயின் தலைமையகம் எங்குள்ளது ?
8. புலிகள் அதிகமாகக் காணப்படும் கண்டம் எது ?
9. மிக விரிவான இறக்கையுடைய பறவை எது ?
10. பூனையின் அறிவியல் பெயர் என்ன ?

பதில்கள்
1.T.H.மைமா,1960, 2.ஆம்பியர், 3.ஜார்ஜ் பாலம் (அமெரிக்கா)
4.புதன், 5.கீரீன்லாந்து , 6. 1989 ஆம் ஆண்டு, 7. நீயூடெல்லி,
8.ஆசியா , 9.ஆல்பட்ராஸ் , 10.பெலிஸ்கேடஸ்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கோள்களே இல்லாத கிரகம் என்னும் கேள்வி தவறாகும். கிரகம் என நாம்
அயல்மொழியில் அழைப்பதன் பெயர்தான் கோள் என்பதாகும். உலவிகளே இல்லாத கோள்
என்று குறிப்பிட வேண்டும். உலவி என்பது கோள்களைச் சுற்றி உலவி வருவன.
சான்றாக நம் புவியைச் சுற்றி மதி அல்லது திங்கள் என அழைக்கப் பெறும் ஓர்
உலவி உள்ளது. பல கோள்களைச் சுற்றி ஒன்றுக்கு மேற்பட்ட உலவிகள் வலம்
வருகின்றன..புதனுக்கு அவ்வாறு ஒன்றும் இல்லை.தாங்கள் விரும்பினால்
அறிவியல் தமிழ் கலைச் சொற்கள் என்னும் ஒரு புதிய பகுதியைத் தொடங்கி
அன்றாடம் கலைச் சொல் விளக்கம் தரலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வினாக்கள் மற்றும் பதில்கள்
1. பாஸ்பரஸ் எங்கு சேமித்து வைக்கப்படுகிறது ?
2. சூரியனின் உட்பகுதிக்கு கொடுக்கப்பட்ட பெயர் என்ன ?
3. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எது ?
4. இந்திய கிரிக்கெட் அணிக்கு முதன் முதலாக நியமிக்கப்பட்ட
வெளிநாட்டு பயிற்ச்சியாளர் யார் ?
5. மிக நீளமான இரயில்வே பாலம் எது ?
6. இந்தியாவில் பாலிவுட் எனப்படும் நகரம் எது ?
7. பாடல்கள் இல்லாத முதல் தமிழ்ப்படம் எது ?
8. வண்ணச் சாயம் அளிக்கும் பூச்சி எது ?
9. மிகப்பெரிய நீர்ப்பறவை எது ?
10. கிரேக்கத்தின் புகழ் பெற்ற கணிதவியலாளர் யார் ?

பதில்கள்
1.நீருக்கடியில்2.தெர்மோஸ்பியர்3.காங்கிரஸ் நூலகம் அமெரிக்கா
4.ஜான்ரைட், 5.சோனி பாலம், 6.மும்பை, 7.அந்த நாள் ,
8.கோக்ஸ் பூச்சி, 9.அன்னம்,10.பித்தாகரஸ்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வின்மணி இன்றைய சிந்தனை
நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுங்கள் ஆபத்து
காலத்தில் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உதவி
செய்பவன் அவன் மட்டும் தான். அதே போல நண்பர்களிடம்
நேர்மையாகவும் உண்மையாகவும் இருங்கள்.

TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1. உலகிலேயே கொசுக்களே இல்லாத நாடு எது ?
2. கனடாவின் பழைய பெயர் என்ன ?
3. உடலில் இரத்த அழுத்தம் பாயாத பகுதி எது ?
4. தங்கத்தின் அறிவியல் பெயர் என்ன ?
5. சோழ வம்சம் யாரால் அழைக்கப்பட்டது ?
6.விமானங்களின் சக்கரங்களில் எந்த வாயு அடைக்கப்பட்டுள்ளது?
7.உலகின் முதல் குடியரசு நாடு எது ?
8.நமது உடலில் எவ்வளவு தண்ணிர் உள்ளது ?
9.ஆசியாவின் மிக்பெரிய கோபுரம் எது ?
10. போஸ்ட்கார்டை முதலில் அறிமுகபடுத்திய நாடு எது ?

பதில்கள்:
1. பிரான்ஸ்,2.கோல்டு கோஸ்ட்,3.கருவிழி,
4.அயூரியம்,5.விஜயாலய சோழர்,6.நைட்ரஜன்
7.ஸ்பார்ட்டா,8.71 விழுக்காடு,9.ஸ்ரீரங்கம் ஆலயகோபுரம்
10.ஆஸ்திரேலியா

இன்று ஏப்ரல் 11
பெயர் : ஓட்டோ கொலொமன் வாக்னர் ,
மறைந்த தேதி : ஏப்ரல் 11, 1995
இவர் ஒரு ஆஸ்திரியக் கட்டிடக்கலைஞர் ஆவார்.
1864 ஆம் ஆண்டில் தனது முதலாவது
கட்டிடத்தை, வரலாற்றியப் பாணியில்
(historicist style) வடிவமைத்தார்.
ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் என்னும் நாடுகளைச்
சேர்ந்த சமகாலக் கட்டிடக்கலைஞர்களைப் போல் இவரும்
கட்டிடக் கலைசார் இயல்பியத்தின் (Architectural Realism)
ஆதரவாளராக இருந்தார்.