Saturday, March 30, 2013

இந்த வார க் கலாரசிகன்

இந்த வார க் கலாரசிகன்

எனக்கும் திருத்தணி பவானி மருத்துவமனை டாக்டர் பி.கே. கேசவராமுக்கும் நட்பு ஏற்படக் காரணமாக இருந்தது, 30 ஆண்டுகளுக்கு முன்னால் அவர் தயாரித்த "மூக்கணாங்கயிறு' திரைப்படம்தான். அப்போது நான் "சாவி' வார இதழின் உதவி ஆசிரியராக அரசியல், சினிமா என்று எதையும் விடாமல் எழுதித் தள்ளிக்கொண்டிருந்த நேரம். அன்றைய நட்பு இன்று வரை தொடர்கிறது.
இப்போது டாக்டர் கேசவராமைப் பற்றி நான் குறிப்பிடுவதற்கு அவர் அடிக்கடி என்னிடம் எழுப்பும் ஒரு கேள்விதான் காரணம். அவர் அடிக்கடி எழுப்பும் அதே கேள்வியைக் கடிதம் மூலம் நாகர்கோவில் ப.சிவதாணுப் பிள்ளையும் எழுப்பியிருப்பதுவும் காரணம்.
""என்னவெல்லாமோ பெயர் மாற்றம் எல்லாம் செய்கிறார்களே, இன்னும் ஏன் தமிழ்நாடு (பஏஅஙஐழஏ சஅஈம) என்று ஆங்கிலத்தில் எழுதாமல், அதிகாரபூர்வ அரசு ஆவணங்கள் உட்பட "டமில் நாடு' (பஅஙஐக சஅஈம) என்று எழுதுகிறோம்? 1967-இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது மெட்ராஸ் மாநிலம் என்பதைத் தமிழ்நாடு என்று மாற்றியபோது, ஏன் "டமில் நாடு' என்று ஆங்கிலத்தில் வைத்துக் கொண்டார்கள்?'' - இதுதான் டாக்டர் கேசவராம் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக என்னிடம் கேட்கும் கேள்வி. அதேதான், இப்போது ப.சிவதாணு பிள்ளையும் எழுப்பி இருக்கும் கேள்வி.
தமிழ்நாடு என்கிற பெயரை முதலில் அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான். சுதந்திரத்துக்கு முன்பே, அவர்கள் "தமிழ்நாடு பிரதேச காங்கிரஸ் கமிட்டி' என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகப் பிரிவை அழைத்து வந்தனர். சுதந்திரம் அடைந்தது முதலே, மதராஸ் ராஜதானியைத் தமிழகம் அல்லது தமிழ்நாடு என்று அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார் "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி.
காமராஜ் முதலமைச்சராக இருந்தபோது, அவை முன்னவராக இருந்த கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் முன்மொழிந்து, ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்' என்றும் தமிழில் "தமிழ்நாடு' என்றும் வழங்கும் தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு விட்டிருந்தது. 1967-இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான், முதல்வர் சி.என். அண்ணாதுரை அரசுத் தீர்மானமாக முன்மொழிந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் தமிழ்நாடு என்று அதிகாரபூர்வமாகப் புழக்கத்தில் வந்தது.
தமிழ்நாடு என்கிற பெயர் நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாமல் ஏனைய மாநிலங்களிலும் கூட அலுவல் காரணமாகப் பயன்படுத்தக் கூடும் என்றும், அவர்களால் தமிழ்நாடு என்று இருந்தால் சரியாக உச்சரிக்கவோ, எழுதவோ முடியாது என்பதால், அப்போது ஆங்கிலத்தில் தமிழ்நாடு என்று எழுதாமல் "டமில் நாடு' என்று ஏற்றுக்கொண்டதாக அன்றைய சட்ட அமைச்சராக இருந்து மசோதாவைத் தாக்கல் செய்த செ.மாதவன் கருத்துத் தெரிவிக்கிறார்.
அதெல்லாம் பழைய சம்பவங்கள். இப்போதும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. அழகிரி, கனிமொழி போன்ற பெயர்களை எல்லா மாநிலத்தவர்களும் உச்சரிக்க முடியுமானால், இனியும் ஏன் நாம் "டமில் நாடாக' இருக்க வேண்டும்? தமிழ்நாடு எப்போது அதிகாரப்பூர்வமாகத் "தமிழ் நாடு' என்று அழைக்கப்படப் போகிறது?

======================

புத்தகப் பிரியர்களைச் சந்திக்கப் போகும் போது, நாம் படித்த நல்ல புத்தகங்களை அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பது என்பது ஒரு நல்ல பழக்கம். அந்தப் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருப்பவர் புதுக்கல்லூரிப் பேராசிரியர் ஹாஜாகனி. கடந்த செப்டம்பர் மாதம் என்னை அவர் சந்திக்க வந்தபோது எனக்குப் பரிசளித்த புத்தகம், பேராசிரியர் கா.அப்துல் கஃபூரின் "இலக்கியம் ஈந்த தமிழ்'.
1957-இல், மா.இராசமாணிக்கனாரின் மதிப்புரையுடன் வெளிவந்த புத்தகத்தை மறுபதிப்பு செய்திருக்கிறார்கள் குமரிமாவட்டம் திருவிதாங்கோடு நன்னெறி பதிப்பகத்தார். இறையருட் கவிமணி, தமிழ்ச் செம்மல் என்றெல்லாம் போற்றப்படும் பேராசிரியர் கா.அப்துல் கஃபூர், தமிழாய் வாழ்ந்த பெருமக்கள் பலரில் ஒருவர். "பேராசிரியருக்கெல்லாம் பேராசிரியர்' என்று அவரது மாணவர் முன்னாள் அமைச்சர் சாதிக்பாட்சாவால் போற்றப்பட்ட அப்துல் கஃபூர் ஒரு மிகப்பெரிய சாதனையாளர்.
முதுகலையில் தமிழ் பயின்று கல்லூரி முதல்வரான முதல்வர்களில் முதல்வர் அவர். இன்று இலக்கிய மேடைகளில் மேன்மையோடு திகழும் கவியரங்கங்களைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் முதல்வர். மறுபதிப்புக்கு அனுமதியளித்த பேராசிரியருக்கு, அது வெளிவரும்வரை வாழக் கொடுத்து வைக்கவில்லை. கடந்த 2002-ஆம் ஆண்டு அல்லாவுடன் ஐக்கியமாகிவிட்டார்.
பொறுக்கி எடுத்த 11 கட்டுரைகள். ஒவ்வொன்றும் ஆழ்கடல் முத்து. மதிப்புரை வழங்கி இருக்கும் இராசமாணிக்கனார் குறிப்பிடுவதுபோல, எளிய, இனிய, செந்தமிழ் நடையில், ஒவ்வொரு கட்டுரையும் தமிழ் இலக்கிய மேற்கோளுடன் எழுதப்பட்டிருக்கிறது. "தமிழ் வளர்த்த பண்பாடு' எனும் கட்டுரையில் தொடங்கிப் "புதுப்புனல்' ஈறாக அமைந்துள்ள பதினோரு கட்டுரைகளும், ஒன்றை மற்றொன்று விஞ்சி நிற்கும் தன்மையன. சொற்செறிவும், பொருட் செறிவும் மட்டுமல்ல, ஆற்றொழுக்கு போன்ற நடையழகும், பள்ளி மாணவர்கள் கூடப் படித்துப் புரிந்து கொள்ளத்தக்க எளிமையும் பேராசிரியர் அப்துல் கஃபூரின் எழுத்தின் தனித்தன்மைகள்.
"ஆசுகவி' பற்றி ஒரு கட்டுரை. ""புலமைச் செல்வம் வாய்க்கப் பெற்ற புலவர்களை, "கவி, கமகன், வாதி, வாக்கி' என இலக்கண நூலார் நான்கு வகையாகப் பிரித்தனர். அதில், ஆசு கவியின் இலக்கணம் என்ன?குறிப்பிட்ட ஓர் எழுத்தையோ, சொல்லையோ, பொருளையோ, யாப்பையோ, அணியையோ கொடுத்து, அதன்படி ஒருவர் பாடச் சொல்லும் போது, அவரெதிரே பாடப்படுவது ஆசு கவியாக அமையும்.
"ஆசு' எனும் சொல் பல பொருள்களில் பயின்றுவரக் காண்கிறோம். ""ஆசா கெந்தை யாண்டுளென்கொல்லோ!'' என்று ஒüவை கூறும்போது, "பற்றுக்கோடு' என்பது பொருள். ""அரியகற்று ஆசற்றோர் கண்ணும்'' என்று வள்ளுவம் கூறும்போது, "குற்றம்' என்பது பொருள். "தேசிகமென்றிவை ஆசின் உணர்ந்து' என்று இளங்கோவடிகள் கூறும்போது, அங்கே "நுட்பம்' என்று பொருளாகிறது.
ஐயம், அற்பம், துன்பம், இலக்கு, கவசம்,
ஆணவ மலம், வாளின் கைப்பிடி, நூலிழைக்குங் கருவி போன்ற பல பொருள்களைக் குறிக்க "ஆசு' என்கிற ஈரெழுத்தொரு சொல் பயன்படுகிறது. அது மட்டுமல்ல, நேரிசை வெண்பாவின் முதற்குறளில் இறுதிச் சீருக்கும் தனிச் சொற்குமிடையில் கூட்டப்படும் அசையினை ஆசென்று வழங்குகிறது காரிகை.
 மேலே குறிப்பிட்ட எதிலிருந்தும் ஆசுகவி என்கிற அந்தப் பெயர் அமையவில்லை. "ஆசு' என்பதற்கு வடமொழியில் "விரைவு' என்று பொருள். விரைவாகச் செல்வதன் காரணமாக, அம்பை "ஆசுகம்' என்றும், வாயுவை "ஆசுகன்' என்றும், பறவையை "ஆசுகி' என்றும் வடமொழியில் அழைத்தனர். அதுபோல, கொடுத்த பொருளை, அடுத்த பொழுதிற் பாடும் புலவனை "ஆசு கவி' என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டிருக்கக் கூடும்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். "ஆசு கவி' போல, ஒவ்வொரு கட்டுரையும் ஒரு புதுச் செய்தியை, ஆய்வை முன் வைக்கிறது. எனக்கு ஒரு சின்ன வருத்தம். அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தும், பேராசிரியர் அப்துல் கஃபூர் என்கிற தமிழ்ப் பெருந்தகையை நேரில் சந்திக்காமல் விட்ட மாபாவியாகி விட்டேனே....!

======================

பட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் நடத்தும் சிற்றிதழ், "இலக்கியச் சிறகு'. அதில், திருக்குவளை வெற்றிப் பேரொளி எழுதியிருக்கும் கவிதை "புதை மணல்'.

பெருமணல் சிறுமணல்
பொடி மணல் எல்லாம் போய்
இப்போது பிண மணல்.
அன்று ஆற்றங்கரையோரம்
சுடுகாடு
இன்று சுடுகாட்டில்
ஆறு!

திருக்குறள் மாளிகை

திருக்குறள் மாளிகை







குறிப்பு: என்னுடைய வடிவமைப்பில் உருவானது (2009-ஆம் ஆண்டு முன்பு) இந்தத் திருக்குறள் மாளிகை. வடிவமைப்பில் ஓர் அதிகாரம் இடம்மாறியுள்ளது. "தெய்வச் சேக்கிழார்' என்ற திங்கள் இதழில் வெளிவந்ததனால் சேக்கிழார் திருவுருவம் அந்த இதழின் பொருண்மைக்கு ஏற்ப சேர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறள் மாளிகை வடிவமைப்பு: புலவர் மா.அமிர்தலிங்கனார், காஞ்சிபுரம்.

Saturday, March 23, 2013

செ. மாதவனின் புதல்வி வெற்றிச்செல்வியைவாழ்த்துக

இந்த வாரம் கலாரசிகன்





இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க் சென்றிருந்தபோது, நண்பர் ஒருவர் என்னை நியூயார்க்கின் புறநகர் குடியிருப்பு நகரங்களான கணக்டிகட்டுக்கும், நியூ ஜெர்ஸிக்கும் அழைத்துச் சென்றார். அங்கே நான் சென்ற வீடுகளிலுள்ள குழந்தைகள் நன்றாகத் தமிழ் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள்.
நமது ஊரில், சுற்றிலும் தமிழ்ச் சூழலின் வளரும் குழந்தைகள் பலருக்கும் தமிழ் பேசவும் எழுதவும் தெரியாத நிலையில், முழுக்க முழுக்க ஆங்கிலச் சூழலில் வளரும் குழந்தைகள் எப்படி தமிழ் பேச, எழுத, படித்தனர் என்று கேட்டபோது, எனக்குக் கிடைத்த பதில் "கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்' தான் காரணம் என்பது.
அமெரிக்காவில் குடியேறிவிட்ட தமிழர்களின் குழந்தைகள் தாய்மொழி தெரியாமல் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக "கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்' ஒன்றை நிறுவி, அமெரிக்கா மற்றும் கனடாவில் தமிழ்ப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதை நடத்துவது யார் என்று கேட்டபோது ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது.
அறிஞர் அண்ணாவால் அடையாளம் காணப்பட்டு அவரது அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த செ. மாதவனின் புதல்வி வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம்தான் கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தின் நிறுவனராக இந்தத் தமிழ்ப் பணியைச் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர்.
கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தின் ஆண்டு மலர் ஒன்றில், குழந்தைகள் "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்' என்பதைத் தங்கள் கைப்படப் பதிவு செய்திருக்கிறார்கள்.
"என் சொந்த ஊருக்குப் போகும்போது அனைவருடனும் பேச தமிழ் கற்பது உதவும்' என்று வான்மதி விஷ்ணுவும், "நம் தமிழ்ப் பண்பாட்டை நன்கு புரிந்துகொள்ள நான் தமிழ்ப் பள்ளிக்கு செல்கிறேன்' என்று சங்கீதா அண்ணாமலையும், "இந்தியாவில், நான் தாத்தா பாட்டியுடன் தமிழ் பேசுவேன்' என்று கார்த்திக்கும், "தமிழ் எனது தாய்மொழி. அதனால் நான் தமிழ் படிக்கிறேன்' என்று ஸ்ரேயஸýம், "தமிழ் படிப்பது, எனது கலாசாரத்தை நினைவு படுத்துகிறது' என்று விஷாலும் பதிவு செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நான்காம் வகுப்பு படிக்கும் குழந்தைகள்.
வெற்றிச் செல்வியைப் பாராட்டுவதா, அவரைத் தமிழ் பரப்பத் தூண்டிய அவரது தந்தை முன்னாள் அமைச்சர் செ. மாதவனுக்குத் தமிழுணர்வாளர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதா?
* * * *

புலவர்களைக் காக்கும் புரவலர்கள் யார்?

புலவர்களைக் காக்கும் புரவலர்கள் யார்?

பண்டைத் தமிழகத்தில் தமிழ்க் கடலின் ஆழம் கண்ட புலவர்களை மன்னர்களும் வள்ளல்களும் பாதுகாத்ததன் மூலம் தமிழ் வளர்த்தனர். தமிழ் வளர்த்த வள்ளல்களைப் புலவர்கள் கடவுளுக்கு அடுத்த நிலையில் பாடினர்.
÷இராமசந்திரக் கவிராயர் என்னும் நகைச்சுவைப் புலவர் கடவுளுக்குப் பெருமை தரக்கூடிய புராணக் கதைகளைக் குறைவுள்ளது போல் பாடிப் பெருமைப்படுத்தியுள்ளார். அப்பாடல்களை "நிந்தாஸ்துதி' என்பர்.
÷சிவபெருமான் பத்மாசுரனுக்கு அவன் யார் தலையில் கைவைத்தாலும் தலைவெடித்துவிடும் என்று வரம் கொடுத்தார். அவன் சிவபெருமான் தலையிலேயே கை வைக்க வந்தான். அவனுக்குப் பயந்து முக்கண் சாமியாகிய சிவபெருமான் நீண்ட காலம் மூங்கிலிலே ஒளிந்திருந்தார்.
÷முகுந்த சாமியாகிய திருமால் பழைமையான திருப்பாற்கடலில் போய்ப் பள்ளி கொண்டார். நான்கு தலைகளையுடைய சாமியாகிய பிரமன் தாமரை மலரில் இருந்து கொண்டார். "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளைத் தந்தைக்கு உபதேசித்து "தகப்பன்சாமி' என்று பெயர் பெற்ற முருகன் மலைகளில் இருந்து கொண்டார். வயிற்றுச் சாமியாகிய விநாயகர் பக்தர்கள் கொடுக்கும் உணவுக்காக வழிகளில் இருந்தார்.
÷ஐந்து சாமிகளும் இவ்வாறு ஐந்திடங்களில் அமர்ந்ததனால், உலகை, தமிழ்ப் புலவர்களைக் காக்கும் மற்றோர் சாமி, யார் என்றால் மயிலையிலே பொன்னப்பசாமி என்பவர் பெற்ற வேங்கடசாமி என்னும் வள்ளலேயாவார் என்ற பொருளில்,
மூங்கிலிலே ஒளிந்திருந்தான் முக்கண் சாமி
முதிய கடல் போய்ப்படுத்தான் முகுந்த சாமி
தாங்கமலப் பொகுட்குறைந்தான் தலைநால் சாமி
வாங்கியுண்ண வழிகாத்தான் வயிற்றுச் சாமி
வாணருக்கிங் குதவுபர்யார் மற்றோர் சாமி
ஓங்கியசீர் மயிலையிலே பொன்னப்பசாமி
உதவியவேங் கடசாமி உசித வேளே!
என்று நகைச்சுவையும் தமிழ்ச்சுவையும் கமழப் பாடியுள்ளார்.

குட்டிக்குறள்!

குட்டிக்குறள்!




திருக்குறள் ஒன்றே முக்கால் அடிகளில் ஏழு சீர்களில் அமைக்கப்பட்டுள்ளது. ""எல்லோரும்  திருக்குறளை குறுகியது என எண்ணினர், அறிஞர் சுகவனம் சிவப்பிரகாசனாரின் உள்ளம் மட்டுமே, அதைப் "பெரியது' என எண்ணியது. அதன் விளைவே குட்டிக்குறள்''  என்று தமிழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் பாராட்டியுள்ளார். திருக்குறளைக் குட்டிக் குறளாக வழங்கியவர் "கிளிக்காட்டு இறை ஒளியினார்' என்று வழங்கப்பட்ட "சுகவனம்' சிவப்பிரகாசனாராவார்.
÷சேலத்திற்கு "சுகவனம்' என்ற பெயருண்டு. சேலத்தில் வசித்த சிவப்பிரகாசர் தன் பெயருக்கு முன்பாக "சுகவனம்' என்பதை சேர்த்து "சுகவனம் சிவப்பிரகாசர்' என்று அழைக்கப்பட்டார். சிறுவர் முதல் முதியோர் வரை எளிதில் உணரும் வகையில், ஒரே வரியில் திருக்குறட் கருத்துகளை வெளியிட விரும்பிய  சிவப்பிரகாசனார், ஏழு சீர்களில் இரண்டு வரிகளில் அமைந்துள்ள பாவினை சுருக்கி, நான்கு சீர்களுடன் ஒரே வரியில் கருத்துகள் சிதையா வண்ணம் எழுதி, தமிழ் உலகுக்கு வழங்கியுள்ளார்.
÷சிவப்பிரகாசனாரின் வாழ்நாள் சாதனையாக அவர் வழங்கிய நூல் திருக்குறள் - நூற்பா.  திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் அவற்றின் கருத்துகள் எளிதில் பரவும் வகையில் 1330 குட்டிக்குறள்களாக அமைந்ததே இந்நூல். பழத்தைச் சாறு பிழிந்து கொடுப்பதுபோல், திருக்குறள் பழத்தைப் பிழிந்து, குட்டிக்குறளாகிய பழச்சாற்றை வழங்கியுள்ளார்.
÷சென்னையிலிருந்து வெளிவரும் "செந்தமிழ்ச் செல்வி' என்ற இலக்கிய இதழில், குட்டிக்குறளை, 1925-ஆம் ஆண்டில் படித்து மகிழ்ந்த தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன், சிவப்பிரகாசனாரைத் தேடிச் சென்று அறிமுகம் செய்து கொண்டார். சிவப்பிரகாசனார் எழுதிய குட்டிக்குறளின் முதல் நூறு பாக்களுக்கு உரையும் எழுதி சிறப்பித்துள்ளார் என்றால், இந்நூலின் மேன்மை எளிதில் விளங்கும். கி.வா.ஜ.வின் உரையைத் தொடர்ந்து, சிவப்பிரகாசனாரின் மகன் மாசிலாமணி, பச்சையப்பன் கல்லூரியில் மாணவராக விளங்கிய காலத்திலேயே அறத்துப்பால் முழுவதற்கும் உரை எழுதி நிறைவு செய்து, "அறநூல்' என்ற பெயரில் நூலாக 1958-ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். இதை, ""மதிப்பிற்கு அப்பாற்பட்ட பொக்கிஷம்'' என்று மனம் நிறைந்து பாராட்டியுள்ளார் மூதறிஞர் ராஜாஜி.

""அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீத்தல் அரிது''
என்ற திருக்குறளை, ""பிற வாழி நீத்தற்கு அறவாழி சேர்'' என்ற குட்டிக் குறளாகச் சுருக்கி எழுதியுள்ளார்.

""குழலும் யாழும் மழலை முன் குழைவ''
என்ற ஓர் அடியின் திறத்தாலேயே,

""குழலினிது யாழ் இனிது என்பதம் மக்கள்
 மழலைச் சொல் கேளாதவர்''
என்ற திருக்குறளை விளங்க வைத்துள்ளார்.
÷இவ்விதம் திருக்குறளின் சாரமாக ஒவ்வொரு குறளுக்கும் உயர்ந்த வகையில் "குட்டிக்குறளை' வடித்துள்ளார் சிவப்பிரகாசர்.
÷குருகுலம் நிறுவி, அழகரடிகளாராகத் திகழ்ந்த இளவழகனார், இந்நூலின் முதல்  நூற்பாவிற்கு மட்டும் தனி விளக்கம் எழுதிப் பேருரையாக வழங்கியுள்ளார். இவரைத் திரு.வி.க. பாராட்டியதன்  காரணமாக "இளந்திருவள்ளுவர்' என்ற புதுபெயர் இவருக்குத் தோன்றியது.
÷1961-இல் இந்தக் குட்டிக்குறள் சேலம் செவ்வைத் திருக்குறட் கழக வெளியீடாக வெளிவந்தது. இதன் ஒரு பிரதிகூடக் கிடைக்காத நிலையில், கோவை கம்பன் கழகத் தலைவர் ஜி.கே.சுந்தரம் 1992-ஆம் ஆண்டு மீண்டும் பதிப்பித்து இலவச வெளியீடாக வெளியிட்டார். தமிழ் இலக்கிய உலகிற்குத் தோன்றாத் துணையாக நின்ற சுகவனம் சிவப்பிரகாசனார் குட்டிக்குறளைப் படிப்போம்; திருக்குறளைப் போற்றுவோம்.

Monday, March 18, 2013

நிறை நிலா (வெள்ளுவா) வராத மாதமும் உண்டு

நிறை நிலா (வெள்ளுவா) வராத மாதமும் உண்டு

நமது உலகத்தில் பல்வேறு அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்துள்ளன. அவற்றை நாம் தெரிந்து கொண்டால், நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் இருக்கும் போது துணுக்காக சொல்லி உடன் இருப்பவர்களை வியப்பில் ஆழ்த்த பயன்படும். எனவே இதுபோன்ற துணுக்குகளைப் படிக்க எப்போதுமே ஆர்வம் அதிகம்.
சரி உங்களது ஆர்வத்தை நாங்கள் பூர்த்தி செய்கிறோம். இதோ உங்களுக்காக சில துணுக்குகள்..
மில்லியன் ஸீரோக்களைக் கொண்ட எண்ணை கூகுள் என்று அழைப்பார்கள். இப்போது புரிகிறதா.. கூகுளின் கீழ் உள்ள G000000000GLEன் அர்த்தம்.
டைட்டானிக் கப்பலை கட்டி முடிக்க வெறும் 7 மில்லியன் டாலர்களே செலவானது. ஆனால், அது பற்றி படம் எடுக்க 200 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது.
யாராவது மூன்று பேர் ஒன்றாக அமர்ந்திருந்தால் அவர்களை மூன்று குரங்குகளுடன் ஒப்பிடுவோம். அந்த குரங்குகளின் பெயர் என்ன தெரியுமா.. மிசரு (தீயவற்றை பேசாதே), மிகசரு (தீயவற்றை கேட்காதே), மசரு (தீயவற்ற பேசாதே).
ஆங்கிலத்தில் ஒன் முதல் தவுசண்ட் வரை எழுதிப் பார்த்தால், அதில் தவுசண்ட் என்ற வார்த்தையில் தான் முதல் ஏ வைப் பாக்க முடியும்.
வெள்ளை நிறத்திலான ஒலிம்பிக் கொடியில் உள்ள வளையங்கள், சிவப்பு, கருப்பு, நீலம், பச்சை, மஞ்சள் நிறங்களில் இருக்கும். இந்த ஐந்து நிறங்களில் ஒரு நிறமாவது அனைத்து நாடுகளின் தேசியக் கொடியிலும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும் என்பது கருத்து.
பொதுவாக மிகப்பெரிய மாவீரர்களின் சிலைகள் குதிரையின் மீது அமர்ந்தவாறு இருக்கும். அவற்றில் ஒரு சில குதிரை, தனது முன்னங்கால்களை தூக்கியபடி நிற்பதாக இருக்கும். அப்படியானால், அந்த வீரன் போரில் உயிரிழந்தான் என்பதை குறிக்கும். ஒரு காலை மட்டுமே தூக்கியபடி குதிரை நின்றால், அந்த வீரன், போரில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்ததாக அர்த்தமாகும். நான்கு கால்களையும் தரையில் ஊன்றி இருந்தால், இயற்கை மரணம் அடைந்ததாக அர்த்தமாகுமாம்.
மனிதனுக்கும் கோலாக் கரடிகளுக்கும் மட்டுமே கை ரேகைகள் இருக்கும்.
ஒரு மனிதன் சராசரியாக 2 வாரங்களை தன் வாழ்நாள் முழுவதும் டிராபிக் சிக்னல்களில் செலவிடுகிறான்.  இதே அமெரிக்காவில் வாழும் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 6 மாதங்களை சிக்னல்கள் முன் செலவிடுகிறாராம்...
கொசுக்களுக்கு மற்ற எந்த நிறத்தை விடவும் நீல நிறம் தான் அதிகம் பிடிக்குமாம்.
1865ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் இதுவரை பௌர்ணமியே வராத ஒரு மாதமாகும்.
ரேடார் டியூப்பை விஞ்ஞானி கடந்து சென்ற போது, அவரது பாக்கெட்டில் வைத்திருந்த சாக்லேட் உருகிவிட்டதாம். இதை வைத்து கண்டுபிடிக்கப்பட்டது தான் மைக்ரோவேவ் அவன்.
1932ஆம் ஆண்டு குளிர் காலத்தின் போது நயாகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் உரைந்து ஐஸ்கட்டியாகிவிட்டதாம்.
உலகத்தில் வாழும் மனிதர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக கோழிகளின் எண்ணிக்கை உள்ளதாம்.
ரப்பர் பேண்டுகளை பிரிட்ஜில் வைத்தால், அதிக நாட்களுக்கு இழுவைத் தன்மையோடு இருக்கும்.
தும்மும் போது நமது கண்களை திறந்து வைத்திருக்கவே முடியாது.
உணவில் தேன் மிகவும் எளிதாக ஜீரணமாகும் உணவாக உள்ளது. அது எதனால் என்றால், பூவில் இருந்து தேனை எடுக்கும் தேனீ ஏற்கனவே அதனை ஜீரணம் செய்து விடுவதால்தான். மேலும் கெட்டுப் போகாத ஒரே உணவு தேன் மட்டுமே.
இதுபோன்றவை இன்னும் தொடரும்...

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கருத்துகள்(2)

மிகவும் அவசியமும் தேவையானதும் ஆன தகவல்கள்.நல்ல முயற்சி .தொடரட்டும் இந்த பணி
2018 பிப்ரவரி கூட பௌர்ணமியே வராத ஒரு மாதமாகும். அது சரி. இரண்டு பௌர்ணமி வந்தால் அதை ப்ளூ மூன் என்கிறோம். பௌர்ணமியே வராவிட்டால் அதை எப்படி குறிப்பிடுவது?
 +++++++++++++++++++++++++++++
நீல நிலவிற்கு(blue  moon ) எதிர்ச்சொல் கருநிலவு (black  moon )என்பதாகும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

Sunday, March 17, 2013

கலப்புத்தமிழ் பேசுவோர் வந்தால் அச்சமாக இருக்கிறது - அயலகத் தமிழர்கள்

மலேசிய, சிங்கப்பூர் வாழ் தமிழர்களுக்கு இரண்டு குறைகள். முதலாவது குறை, தாயகத் தமிழகத்தில் தமிழ் அறிஞர்கள், படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கோ, பாராட்டுகளுக்கோ அயல்நாடு வாழ் தமிழர்களையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதில்லை என்பது. இரண்டாவது குறை, தாயகம் வரும்போது தமிழகத்தில் உள்ள தங்கும் விடுதிகள் எதிலும் தமிழ் நாளிதழ்கள் வழங்கப்படுவதில்லையே என்பது!
இதற்கு முன்பு ஒருமுறை, மலேசியாவிலிருந்து தமிழகம் வந்திருந்த மலேசிய இந்தியன் காங்கிரசின் இளைஞர் பிரிவுத் தலைவர் மோகனும் அவரது மனைவி லோகேஸ்வரியும் இதே ஆதங்கத்தை வெளிப்படுத்தியதைப் பதிவு செய்திருந்தேன். தமிழகத்தில் எந்த ஊருக்குப் போனாலும், அது ஐந்து நட்சத்திர ஹோட்டலாக இருந்தாலும், சாதாரண லாட்ஜாக இருந்தாலும், ஏதாவது ஆங்கில தினசரிகள்தான் அதிகாலையில் அறைகளில் தரப்படுகின்றனவே தவிர, தமிழ் தினசரிகள் தரப்படுவதில்லை என்பது உண்மைதானே?
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன், சக எழுத்தாளர்களுடன் தமிழகத்திற்கு வந்திருந்தபோது, விடுதிகளுக்கு விடுக்கும் முதல் நிபந்தனை எங்களுக்குத் தமிழ் தினசரிதான் தரப்பட வேண்டும் என்பது. ""அப்படித் தமிழ் தினசரி தரமுடியாது என்று சொன்னால் நாங்கள் அந்த விடுதிகளில் தங்குவதில்லை'' என்கிறார் அவர். அயல்நாடு வாழ் தமிழர்களுக்கு இருக்கும் அந்த உணர்வு, தாயகத் தமிழகத்தில் வாழும் நமக்கு இல்லையே என்று நினைக்கும்போது தலைகுனிவாக இருக்கிறது.
இனியாவது நாம் ஏதாவது விடுதிகளுக்குச் சென்று தங்கினால், தமிழ் நாளிதழ்தான் தரவேண்டும் என்று கேட்டுப்பெற வேண்டும். விடுதி அதிபர்களும் தமிழ் நாளிதழ்கள் தங்கள் விடுதிகளில் வைக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சிங்கப்பூரில் நீண்டநாளாக வாழும் தமிழர் ஒருவர் பேசும்போது, "தாயகத் தமிழகத்திலிருந்து யாராவது சிங்கப்பூருக்கு வேலை நிமித்தம் வருகிறார்கள் என்றாலே பயமாக இருக்கிறது' என்றார். "ஏன்?' என்கிற எனது கேள்விக்கு அவரது பதில் - "நாங்கள் கூடிய மட்டும் ஆங்கிலக் கலப்பில்லாமல் தமிழ் பேசுகிறோம். நீங்கள் இங்கே அதிக அளவில் வரத் தொடங்கியிருப்பது, எங்கள் தமிழைக் கெடுத்துக்கொண்டு வருகிறது!'
சிங்கப்பூர் அரசு "தாய்மொழி மாதம்' என்று தனித்தனியாகச் சீனம், மலாய், தமிழ் மொழிகளுக்கு ஆண்டுதோறும் விழா எடுக்கிறது. தாய்மொழியில் பேசுவதை வலியுறுத்தியும், ஊக்குவிக்கவும் அந்த மாதத்தில் ஓர் இயக்கமே நடத்தப்படுகிறது. தாய்மொழி அழிந்துவிடலாகாது என்பதற்காக அரசே முனைப்புடன் செயல்படுகிறது. அதையெல்லாம் பார்க்கிறபோது, எனக்கு மனதிற்குள் மகிழ்ச்சி. தாயகத் தமிழகத்தில் தமிழ் வழக்கொழிந்து போனாலும்கூட சிங்கப்பூர், மலேசியா வாழ் தமிழர்களும், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும் தமிழைக் காப்பாற்றி விடுவார்கள் என்பதுதான் அதற்குக் காரணம்.

கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்!

கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள்!

கல்வெட்டிலும் செப்பேட்டிலும் திருக்குறள் சொல்லாட்சி இடம்பெற்றிருப்பது வியப்பூட்டும் செய்தியல்லவா!
கொங்கு மண்டலப் பகுதியை, சேரநாட்டான் விக்கிரமசோழ தேவன் என்ற அரசன் ஆண்டான். அவனுடைய கல்வெட்டுகள், வலஞ்சுழிநாத சுவாமி கோயிலில் (திருவலஞ்சுழி) காணப்படுகின்றன. அவற்றின் ஒன்றில், ""ஆறில் ஒன்று கொண்டு அல்லவை கடிந்து, கோவீற்றிருந்து குடிபுறம் காத்து'' என்ற தொடர் உள்ளது. "குடிபுறம் காத்து' என்பது, ஒரு குறளில்(549) இடம்பெற்றிருக்கும் தொடர்.


""குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்''

மற்றொரு கல்வெட்டில், வள்ளுவரின் பெயரும் அவர் எழுதிய முப்பாலின் பெயரும், திருவள்ளுவர் சொன்ன முறைப்படியே ஆட்சி செய்யப்படுவதாகவும் குறிக்கப்பட்டுள்ளது.


""இன்சொல்லால் இனிதளித்து
வன்சொலால் மறம் கடிந்து
அழும் குழவிக்கு அன்புடைத்தாய் போல
அனைத் துயிர்க்கும் இனிதென
உலகத்துக்கு உணர நான்கும்
வள்ளுவர் உரைத்த முப்பால்
மொழியும் படியே அறம் அறிந்து
அல்லவை கடிந்து நல்லவை நாட்டி
ஆறில் ஒன்று கடமைகொண்டு
செங்கோல் நீதி வழுவாமல் நடந்து''

என்பது அக் கல்வெட்டுக் குறிப்பு. ""இன்சொல் இனிது ஈன்றல் காண்டான் (குறள்-99)

""அல்லவைதேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்'' (குறள்-96) என்னும் குறட்பாக்களில் வரும் சொல்லாட்சி, அக் கல்வெட்டில் படிந்திருக்கின்றன.

பல்லடம் செப்பேடு பின்வரும் முறையில், வள்ளுவத்தைப் போற்றுகிறது.

""ஓதி உணர்ந்து உலகம் முழுதாண்டு
நீதி சாகரம் நினைவுடன் கற்று
மும்மொழி விநோதன்;
முத்தமிழ் தெரிந்தோன்
வள்ளுவர் மரபு காத்து
முப்பால் மொழியின் படியே
அல்லவை கடிந்து நல்லவை நாட்டி''

என்று அச்செப்பேடு அறிவிக்கிறது.
""ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தான் அடங்காப்
பேதையின் பேதையார் இல்'' (குறள்-834)

என்ற குறளில் வரும் ""ஓதியுணர்ந்து'' என்ற தொடரும் குறள் 96-இல் வரும் அல்லவை, நல்லவை என்ற சொற்களும் இதில் அமைந்திருப்பதைக் காணலாம்.
பழநி வீரமுடியாளர் செப்பேடு ஒன்றும் வள்ளுவரைப் போற்றி உரைக்கிறது. திருக்குறளின் பெருமையைப் பறைசாற்றும் இந்தக் கல்வெட்டும் செப்பேடும் "வள்ளுவர் உரைத்த முப்பால்' என்றே கூறுகின்றன. திருவள்ளுவர் தன் நூலுக்கு "முப்பால்' என்றே பெயர் சூட்டியிருப்பார் என்று ஒரு கருத்து கூறப்படுகிறது. அக்கருத்துக்கு இவை சான்றாகத் திகழ்கின்றன.

Saturday, March 9, 2013

பெண் "முதல்"வர்கள்!

பெண் "முதல்"வர்கள்!

டாக்டர். முத்துலட்சுமிரெட்டி

1.   ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் வேகமாக துடிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
2.   புகழ்பெற்ற பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க் பிறந்தது மே 30, 1431
3.   கைவிளக்கேந்திய காரிகை நைட்டிங்கேல் அம்மையார் பிறந்தது மே 12, 1820
4.   இதுவரை ஒன்பது பெண்கள் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்.
5.   உலகின் முதல் விண்வெளி வீராங்கணை வாலண்டினா தெரஸ்கோவா 45முறை பூமியை வெற்றிகரமாக வலம் வந்தவர்.
6.   இரண்டுமுறை நோபல் பரிசு பெற்ற மேடம் கியுரி சிறுவயதில் வீட்டுவேலை செய்யும் வேலைக்கார சிறுமியாக தம் வாழ்க்கையை பல கஷ்டங்களுக்கிடையே துவக்கினார்.
 மேடம்கியுரி
7.   ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய பெண் ஆரதி சாகா.
8.   ஆங்கிலக் கால்வாயை மிக வேகமாக நீந்திய ஒரே ஆசிய வீராங்கனை அனிதா சூட். 81/4 மணி நேரத்தில் நீந்திக்கடந்தார்.
9.   இந்திய விமானப்படையில் முதன் முதலில் பெண்கள் ஜூலை19,1993ல் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
10. வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப் பெண் டாக்டர் விஜயலட்சுமி பண்டிட்.
11. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
12. உலகின் முதல் பெண் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா.
13. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் திருமதி பாத்திமா பீவி.
14. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி திருமதி பிரதீபா பாட்டில்.
15. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியுசிலாந்து.
16. இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற  நீதிபதி அண்ணா சாண்டி.
17. இந்தியாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெண்மணி சானியாமிர்ஸா.
18. மிகக் குறைந்த வயதில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் வென்ற பெண்மணி மார்டினாஹிங்கிஸ்.
19. இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் வசந்தி
20. இந்தியாவின் முதல் பெண் பைலட் துர்கா பேனர்ஜி
21. இந்தியாவை ஆண்ட முதல் பெண் சுல்தானா ரஸியா பேகம்.
 சகுந்தலா தேவி
22. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் பெண் சகுந்தலா தேவி.
 கல்பனாசாவ்லா
23. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப்  பெண் கல்பனாசாவ்லா
24. இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபா நாயகர் மீரா குமார்.
25. இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுஜேதா கிருபாளினி.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!  நன்றி!
0
Votes

நாடகக் களஞ்சியம்

நாடகக் களஞ்சியம்




"கலைக்கரசு' என்று போற்றப்படும் கலை - நாடகக் கலை.

"தமிழ் நாடகத் தலைமையாசிரியர்' என்று போற்றப்படுபவர் - தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.

சமரச சன்மார்க்க நாடகச் சபையை நிறுவியவர் - தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.

மனோன்மணீயம் நாடகத்தின் ஆசிரியர் - பேராசிரியர் சுந்தரம்பிள்ளை.

மனோன்மணீயம் பட்ங் ள்ங்ஸ்ரீழ்ங்ற் ஜ்ஹஹ் - (இரகசியவழி) என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது.

"அனிச்ச அடி' என்னும் நாடகத்தின் ஆசிரியர் - அ.பழனி.

மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாடகம் - அனிச்ச அடி.

"மண்ணியல் சிறு தேர்' என்னும் நாடகம், வடமொழி நூலான மிருச்சகடிகம் என்ற நூலைத் தழுவி பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியாரால் எழுதப்பட்டது.

தமிழில் முதன் முதலில் தோன்றிய சமூக நாடகம் - டம்பாசாரி விலாசம்.

"டம்பாசாரி விலாசம்' எனும் நாடகத்தின் ஆசிரியர் - காசி விசுவநாத முதலியார்.

"நந்தனார் சரித்திரம்' என்னும் நாடகத்தின் ஆசிரியர் - கோபால கிருஷ்ண பாரதியார்.

"தமிழ் நாடகத் தந்தை' எனப் போற்றப்படுவர் - பம்மல் சம்பந்த முதலியார்.

சங்கரதாஸ் சுவாமிகள் இயற்றிய நூல்கள் - அபிமன்யு, சுந்தரி, அல்லி அர்ஜூனா, இலங்கா, இலங்கா தகனம், கோவலன், சிறுத்தொண்டர் முதலியன.

சங்கரதாஸ் சுவாமிகளின் பட்டப்பெயர்கள் - பேரறிஞர், நடிப்புக் கலைவன பேராசான், ஞானச்செம்மல், மகாமேதை, கலங்கரை விளக்கம், நாடக உலகின் இமயமலை, நாடக உலகின் ஓர் நல்லிசைப்புலவர்.

"ஞானப்பழத்தைப் பிழிந்து' எனும் பாடலை (திருவிளையாடல் - ஒüவையார்) இயற்றியவர் - தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்.

"சுகுண விலாச சபை'யை நிறுவியவர் - பம்மல் சம்பந்த முதலியார்.

பம்மல் சம்பந்த முதலியார் இயற்றிய நூல்கள் - நான்கண்ட நாடகக் கலைஞர்கள், நாடகத்தமிழ், நடிப்புக் கலை, நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்போ?, நாடகமேடை நினைவுகள்.

பம்மல் சம்பந்த முதலியார் இயற்றிய சிறப்பான நாடகங்கள் - சதிசுலோச்சனா, யயாதி, காலவரிஷி, சபாபதி, கலையோ காதலோ?, பொன் விலங்குகள், குறமகன், தாசிப்பெண் ஆகியவை.

பரிதிமாற்கலைஞர் இயற்றிய நாடகங்கள் - ரூபாவதி, கலாவதி, மானவிசயம், சூர்ப்பனகை.

பரிதிமாற்கலைஞர் இயற்றிய நாடக இலக்கண நூல் - நாடகவியல்.

(தொடரும்)