Saturday, April 27, 2013

தாய்மொழி மறவா சௌராட்டிரர்

இந்த வார க் கலா இரசிகன்

குஜராத் மாநிலம் செüராஷ்டிராவிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் குடியேறியவர்கள் செüராஷ்டிர இனத்தவர்கள். மாநிலம் மாறிவந்தாலும் தங்கள் தாய்மொழியை மறக்காமல் இருப்பதற்காவே அவர்களைப் பாராட்ட வேண்டும். (வெளிமாநிலங்களில் குடியேறும் தமிழர்கள் செüராஷ்டிர சமுதாயத்தினரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களில் இதுவும் ஒன்று).
மதுரையிலிருந்து நண்பர் தெட்சிணாமூர்த்தி ஒரு தகவல் அனுப்பி இருக்கிறார். இன்று காலை பத்து மணிக்கு, மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதியில் அமைந்த "கீதா நடன கோபால நாயகி மந்திர்' அரங்கத்தில் "மகாபாரதம்' செüராஷ்டிர மொழியில் பெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகிறது என்பதுதான் அவர் அனுப்பியிருந்த தகவல்.
"பாண்டவாஸ் கெதொ' (பாண்டவர்களின் கதை) என்கிற புத்தகத்தை எழுதியிருப்பவர் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் சாதாரண நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த கஸின் ஆனந்தம் என்பவர். செüராஷ்டிர மொழியைப் பயின்றதுடன் நிற்காமல், பலருக்கும் அந்த மொழியைக் கற்பிக்கும் பணியையும் செய்து வருபவர். இவரைப் பற்றிய இன்னொரு சிறப்புத் தகவல், கஸின் ஆனந்தம் செüராஷ்டிர மொழியில் பல சிறுகதைகளும், குறுநாவல்களும் எழுதியிருக்கிறார் என்பதுதான்.
தாய் மொழியை மறவாத அவரை முன்மாதிரியாக நாம் கொள்ள வேண்டும். அவரது தாய்மொழிப் பற்றுக்கு நமது மனமார்ந்த பாராட்டுகள்!
--------------------------
""காதல் சுகம்தான், ஆனால், அதைவிட இதம், குடும்பத்தின் பேரன்பு. காலமெல்லாம் ஊட்டி வளர்த்த உறவுகளை உதறிவிட்டு அடையும்படியான அதிசயம் அல்ல காதல்!''
""பெண்கள் ஆடு-மாடுகள் அல்லர்; அவர்களும் மனிதர்கள்தான்! ஆனால், பெண்கள் தங்களை மனித ஜீவன்களாகக் கருதிக்கொள்ளாமல் இருந்தால், அவர்கள் அவ்வாறே நடத்தப்படுவார்கள்!''
""புத்தகத்துக்கு நடுவில் வைத்து ரசிக்கும் மயிலிறகு போன்றது அல்ல பதிவுச் சான்றிதழ். சிலவற்றைச் சொல்லாதபோது மரியாதை கிடைக்கும்; சிலவற்றை நெஞ்சு நிமிர்த்திச் சொல்லும் போதுதான் மரியாதை கிடைக்கும். திருமணம் என்பது அப்படி கம்பீரமாக வெளியில் சொல்லி கெüரவப்படுத்திக் கொள்ளும் விஷயம்''
""நீ செத்துட்டியானா இந்தக் குழந்தையோட கதி எப்படி? எனக் குழந்தையைக் காரணம் காட்டி வாழவைத்த காலம் போய், இன்று இப்படி ஒரு பெண்ணிடம் கேட்கவே அச்சமாக இருக்கிறது. குழந்தைக்காக நாம் வாழ வேண்டும் என்கிற வைராக்கியம் வளர வேண்டுவதற்குப் பதிலாக, நமக்கு முன் குழந்தை செத்துப் போனால் யாருக்கும் பிரச்னை இல்லை என்று சொல்லத் துணிவு பிறந்துவிட்டது. கல்வியில் முன்னேறிய பெண்கள், மன உறுதியில் பின்னடைவு பெற்றிருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறதே அன்றி வேறு என்ன?''
""இ.பி.கோ. பிரிவு 494, 495, 496 என இன்னும் எத்தனை எண்களை வேண்டுமானாலும் சட்டத்தில் சேர்க்கலாம். எண்ணங்கள் பலப்படாதபோது, எண்களால் என்ன பயன்?''
""வரதட்சணைக் கொடுமை இருந்தால், அதற்குத் தண்டனை வாங்கித் தரும் மனத்துணிவு தேவைதான். ஆனால், பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தச் சட்டபூர்வமான தீர்வை கேடயமாகப் பயன்படுத்த வேண்டுமே அன்றி, பழிவாங்கும் வாளாகப் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்தால், அது வீசியவர்களையே கிழித்துவிடும்!''
""ஆயிரம் பாதிக்கப்பட்டோர் அழுத கண்ணீரோடு நீதி கிடைக்காமல் போகலாம்! ஆனால், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்கிறது சட்டம். அப்படியானால், நீதி கிடைக்காமல் போவது, சட்டத்தை நம்பியிருப்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையில்லையா?''
மேலே குறிப்பிட்டிருப்பவை எல்லாம் வழக்குரைஞர் சுமதி "கண்டதைச் சொல்கிறேன்' என்கிற தலைப்பில் எழுதி இருக்கும் பெண்களைப் பாதுகாக்கும் சட்ட வழிகாட்டி என்கிற புத்தகத்திலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கும் மேற்கோள்கள். இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சம்பவப் பின்னணி கதையாகத் தரப்பட்டுள்ளது; சுவாரஸ்யமாகவும் தரப்பட்டுள்ளது.
அதைவிடச் சிறப்பு, பல்வேறு சட்டக் கூறுகளையும் அதன் விளக்கங்களையும் ஒவ்வொரு கட்டுரை முடியும்போது, பெட்டிச் செய்தியாக வெளியிட்டிருப்பது. "மைனர் திருமணம்', "ஹேபியஸ் கார்ப்பஸ்' எனப்படும் "ஆட்கொணர்வு மனு', "டைவர்ஸ் மற்றும் நல்லிட்டி', "பொய் சொல்லித் திருமணம் செய்து கொள்வது', "ஜீவனாம்சம்', "குடும்பநல நீதிமன்றம்', "வரதட்சணைக் கொடுமை', "திருமணச் சட்டப் பதிவுகள் 494, 495, 496', "குற்றவியல் முறைச் சட்டப்பிரிவு -320' ஆகியவற்றின் விளக்கங்கள் தரப்பட்டிருப்பது பாமரருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியவை.
இன்றைய இளைஞர் பற்றியும் திருமண வாழ்வில் ஏற்படக்கூடிய சிக்கல்கள், பிரச்னைகள், தீர்வுகள், சட்ட வழிமுறைகள் போன்ற அனைத்தையும் சம்பவக் கதை போல சொல்லிச் செல்லும் பாங்கு, வழக்குரைஞர், பட்டிமன்ற பேச்சாளர் சுமதியை தேர்ந்த எழுத்தாளராகவும் அடையாளம் காட்டுகிறது.
வழக்குரைஞர் சுமதியின் ரெüத்திரம் பழகு, கல் மண்டபம் இரண்டு நூல்களையும் நான் படித்ததில்லை என்பதால், "அட, சுமதி இவ்வளவு நன்றாக, சுவாரஸ்யமாக எழுதுகிறாரே' என்று வியப்படைவதற்கு என்னிடம் கோபப்படக் கூடாது.
"குடும்பங்களில் பிரச்னைகள் வராமல் தடுப்பது எப்படி என்பதற்கும், வந்த பிரச்னைகளை சட்டத்தின் துணையோடு எதிர்கொள்வது எப்படி என்பதற்கும் இந்த உண்மைக் கதைகள் வழிகாட்டும்' என்கிற பதிப்பாளரின் உரை நூற்றுக்கு நூறு உண்மை.
இரண்டு முறை படித்துவிட்டேன். பக்கத்துக்குப் பக்கம் குறிப்பெடுத்தும் விட்டேன்.
"தினமணி' யின் நடுப்பக்கத்தில், வழக்குரைஞர் சுமதி கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும். கேட்கத்தான் முடியும்; இதற்கெல்லாமா "ஹேபியஸ் கார்ப்பஸ்' மனு போட்டு உரிமை கோர முடியும்?

--------------------------
"டாஸ்மாக்' என்கிற தனது கவிதை வெளிவந்திருந்த "இனிய உதயம்' திங்களிதழை அனுப்பி இருந்தார் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷிணி. அந்த இதழில் "கவிவாணன்' எழுதிய "அர்ப்பணிப்பு' என்கிற கவிதையும் வெளியாகி இருந்தது. என் மன உணர்வுகளை அவர் வெளிப்படுத்தி இருப்பதால் எனக்குப் பிடித்திருந்தது.
இமெயில் இண்டர்நெட் செல்பேசி குறுஞ்செய்தி என எல்லாம் நவீனமானாலும் தபால்காரர் வீட்டுக்குள் வீசிவிட்டுப் போகும் தபாலில் இன்னும் இருக்கிறது உயிர்!

நினைத்ததை முடித்தவர்!

நினைத்ததை முடித்தவர்!

உ.வே.சா. தம் வாழ்நாளிலேயே நற்றிணை, அகநானூறு ஆகிய இரண்டு நூல்களையும் பதிப்பிக்க நினைத்து, ஆராய்ந்து வைத்திருந்த குறிப்புகள் பல. தாம் பதிப்பித்த குறுந்தொகையைப் போல பதவுரை, முடிபு கருத்து, ஒப்புமைப் பகுதிகள் போன்றவற்றுடனும் பதிப்பிக்க எண்ணியிருந்தார். அவர் எண்ணம் நிறைவேறுவதற்கு முன்பே அவர் தமிழன்னையோடு இரண்டறக் கலந்துவிட்டார்.
÷நற்றிணைக்கு உ.வே.சா. எழுதி வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு, அவர் (உ.வே.சா.) நினைத்ததை முடித்து வைத்த பெருமை வித்துவான் எச்.வேங்கடராமனையே சேரும்.
இவர் திருவையாறு அரசர் கல்லூரியில் 36 ஆண்டுகாலம் பேராசிரியராகப் பணியாற்றியவர். நன்னூல் கூறும் நல்லாசிரியருக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.
÷""பதிப்பில் அவர் மலை போன்றவர்; நானோ மடுவினை ஒத்தவன். ஒரு சிறிதும் தகுதியற்றவன். என்றாலும், அவர் எண்ணத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற பேரவாவே என்னை இச்செயலில் இறங்கத் தூண்டிற்று. "ஆசை பற்றி அறையலுற்றேன்' என்று கம்பன் கூறியது போல யானும் "பேர் ஆசை' பற்றியே பதிப்பிக்கலுற்றேன்...'' என்று தமது முகவுரையில் எச்.வேங்கடராமன் கூறியுள்ளார்.
÷நற்றிணைக்கு முதல் உரை கண்டவர் முதுபெரும் புலவர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர். அதன்பின் பொ.வே.சோமசுந்தரனார், ஐயர் உரையை எளிமைப்படுத்திய ஆய்வுரை 1962-இல் வெளிவந்தது. அடுத்து ஒüவை துரைசாமிப்பிள்ளையும், புலியூர் கேசிகனாரும், மர்ரே நிறுவனத்தாரும், மணிமேகலைப் பதிப்பகத்தாரும் நற்றிணையை எளிமைப்படுத்தி வெளியிட்டுள்ளனர். அந்த வரிசையில் டாக்டர் உ.வே.சாமிநாதையர் விட்ட பணியைத் தொடர்ந்து முடித்த வித்துவான் எச். வேங்கடராமனைத் தமிழுலகம் மறக்காது - மறக்கவும் கூ

Wednesday, April 24, 2013

காய்கறிகளிலேயே இருக்கிறது மருத்துவக் குணங்கள்

காய்கறிகளிலேயே இருக்கிறது மருத்துவ க் குணங்கள்

நாம் சாப்பிடும் பல காய்கறிளிலேயே ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றை அறிந்து, உகந்த படி சாப்பிட்டால் நலமாக வாழலாம்.
முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடலில் சேரும் கிருமிகள் வெளியேறும்.
பீன்ஸ், அவரைக்காய், கீரைகள் உண்பதால் மலச்சிக்கல் வராது.
நார்த்தங்காய் பித்தத்தைத் தணிக்கும்.
மாங்காய் சாப்பிட்டால் தாது பலம் பெறும். மலக்குடல் சுத்தமாகும். பசி அதிகரிக்கும்.
பிடிக்கருணைக் கிழங்கு, புடலங்காய் உண்பதால் மூலத்தை அகற்றலாம்.
அவரைக்காயில் புரதம்,  இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள் இருப்பதால் நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் இருப்பவர்கள் அதிகம் சாப்பிடலாம். இரவில் சாப்பிட வேண்டாம்.
மூல நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் அத்திக்காயில் உள்ளது.
பூசணி, முள்ளங்கியில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால் நீர் பிரிந்து பசியைத் தூண்டும்.
கோவைக்காயை சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப் புண், நாக்குக் கொப்புளம் சரியாகும்.
அதேப்போல, முட்டைக்கோஸ், அகத்திக்கீரை வாய்ப்புண், குடல் புண்களை ஆற்றும்.
வாழைத்தண்டு சிறுநீர்ப் பாதையில் இருக்கும் கல்லைக் கரைக்கும்.
வெந்தயக் கீரை எலும்பு தேய்மானத்தைத் தடுக்கும்.
சிறிய வெங்காயம் உடல் சூட்டைத் தணிக்கும்.
சுண்டைக்காயை குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சி சேராது. மூச்சுத் திணறல் குறையும்.
காரட் சாப்பிட்டு வந்தால், உடல் பருமனாகாமல் காக்கும். கண் பார்வைக்கு உகந்தது.
பீன்ஸ் சாப்பிட்டாள் பார்வை தெளிவு கிடைக்கும். சருமம் நன்றாக இருக்கும். பித்தம் குறையும்.
காலிஃபிளவர் புற்றுநோயாளிகளுக்கு ஏற்ற உணவாகும். எதிர்ப்புச் சக்தியை அளித்து புற்றுநோய் வளர்ச்சியை குறைக்கும்.

வளரும் குழந்தைகளுக்கு உலர் திராட்சை

வளரும் குழந்தைகளுக்கு உலர் திராட்சை

உலர்ந்த திராட்சை பழத்தின் மகிமை என்னவென்று பலருக்கு இன்னமும் தெரியவில்லை என்று சொல்லலாம். உலர்ந்த திராட்சை என்றால் சர்க்கரை பொங்கலுக்கும், பாயாசத்திற்கும் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். இதன் பயனை அறிந்தால் வெறும் வாயிலேயே இதை மென்று சாப்பிடுவார்கள்.......வாருங்கள் பார்போம்.
உலர்ந்த திராட்சைப் பழத்தில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. ஓர் உலர்ந்த திராட்சைப் பழம் 30 மிலி கிராம் சுண்ணாம்புச் சத்து கொண்டது. இதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், அவர்கள் நல்ல உடல் பலத்துடன் வேகமாக வளர்ந்து வருவார்கள். எலும்புகளோடு பற்களும் உறுதியாக அமையும். ஆகையால் வளரும் குழந்தைகளுக்கு இரவு உணவுக்குப் பின் தினசரி 15 முதல் 20 வரை திராட்சை பழத்தைக் கொடுத்து வருவது நல்லது.
வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும் பொழுது தினசரி உலர்ந்த திராட்சைப் பழத்தை இரவு ஆகாரத்துக்குப் பின் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு ஏற்படும். எலும்புகள் உறுதியாக இருக்கும், பற்கள் கெட்டிப்படும்; பல் சம்பந்தமான எந்தக் கோளாறும் ஏற்படாது. இதயம் பலத்துடனிருக்கும். இதயத்துடிப்பு இயற்கை அளவிலேயே இருக்கும்.
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பெண்கள் இரவு சாப்பாட்டிற்குப் பிறகு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் சத்தான பால் உற்பத்தியாகும். வளரும் குழந்தைகளின் எலும்புகள் பலப்பட்டு கால்கள் வளையாது வளரும்.
தற்போது உள்ள பருவ பெண்களுக்கு முடி உதிரும் பிரச்னை அதிகமாக உள்ளது. பியூட்டி பார்லர் சென்று ஆலோசனை கேட்பதை விட, தினமும் 10 உலர் திராட்சையை சாப்பிட்டாலே போதும் முடி கொட்டும் பிரச்னையிலிருந்து விடுபடலாம். தினமும் சாப்பிட மண்டையோடு பலப்படும்.

சிரிக்கத் தகுந்த செய்திகள்

 சிரிக்கத் தகுந்த செய்திகள்

சில இயற்கையான, அறிவியல் பூர்வமான விஷயங்களை நாம் கேள்விப் படும் போது ஆச்சரியம் அடைவோம். அதே சமயம் சிரிப்பும் வரும். அதுபோன்ற விஷயங்கள் பல உள்ளன.
அவற்றில் சில...
ஸ்பானிஷ் மொழி பேசும் நாடுகளில் கோல்கேட் பேஸ்ட்டை சந்தைப்படுத்துதல் என்பது மிகப்பெரிய சவாலாகும். ஏன் எனில், ஸ்பானிஷ் மொழியில், கோல் கேட் என்றால், போய் தூக்கில் தொங்கு என்று அர்த்தமாம்.
மற்ற எந்த ரக நாய்களையும் விட, ஜெர்மன் ஷெப்பர்ட் ரக நாய்கள்தான் மனிதர்களை அதிகம் கடிக்கின்றனவாம்.
உணவிலேயே அதிக நாள் கெடாத உணவு என்றால் அது தேன்தான். அதிலும், தேன் விரைவில் ஜீரணமாகும் தன்மை கொண்டது. அது எப்படித் தெரியுமா? தேனிக்கள் ஏற்கனவே ஒரு முறை தேனை ஜீரணம் செய்து விடுகின்றன என்பதால்தான்.
டைட்டானிக் கப்பலை உருவாக்க வெறும் 7 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்ட நிலையில், டைட்டானிக் படத்தை எடுக்க 200 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாம்.
ஒரு உணவைக் கண்டதும், இரட்டை தலைக் கொண்ட பாம்பின் இரண்டு தலைகளும் அதனை உண்ண ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும்.
தைவானில் உள்ள ஒரு நிறுவனம், கோதுமையைப் பயன்படுத்தி சாப்பிடும் தட்டுக்களை உற்பத்தி செய்கின்றன. எனவே நமக்கு பசி அதிகமாக இருந்தால் உணவுத் தட்டைக் கூட சாப்பிட்டுவிடலாம்.
விண்வெளியில் இருப்பவர்களால் கண்ணீர் விட்டு அழ முடியாது. ஏன் என்றால், புவிஈர்ப்பு சக்தி இருந்தால் தானே கண்ணீர் கண்ணில் இருந்து  வெளியே விழும்
சனிக் கிரகத்தைப் பிடித்து நம்மால் கடலில் போட முடிந்தால், அது மூழ்காமல் மிதந்து கொண்டிருக்கும்.
பென்சிலால் எழுதியதை அழிக்கும் ரப்பர் கண்டுபிடிக்கும் முன்பு, ரொட்டி எனப்படும் பிரட் ரப்பராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
காலையில் எழுந்ததும் உற்சாகம் அளிக்க நாம் தேனீர் அருந்துவது உண்டு. அதை விட உற்சாகம் அளிக்கும் சக்தி ஆப்பிள் பழத்துக்கு உள்ளதாம்.

Sunday, April 21, 2013

பாடாய்ப் படுத்தும் வெயிலுக்கு ச்சில குறிப்புகள் .....

பாடாய் ப் படுத்தும் வெயிலுக்கு ச்சில குறிப்புகள் .....

வெயில் காலம் துவங்கி விட்டது. மக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்தை தாக்கு பிடிக்க முடியாமல் வாடி வதங்குகின்றனர். பாடாய் படுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க சில வழி முறைகளை பின்பற்றி உடலை பாதுகாக்கலாமே......
* தர்பூசணியை குளிர்சாதன பெட்டியில் உள்ள பிரீசரில் வைத்தால், பழத்தில் இருக்கும் தண்ணீர் ஃப்ரீஸ் ஆகி ஐஸ்க்ரீம் சாப்பிடுவது போல் இருக்கும்.
* நீர் மோரில் கருவேப்பிலையுடன் பொடியாக அரிந்த வெள்ளரித்துண்டு, மாங்காய், ஒன்றிரண்டாகத் தட்டிய இஞ்சி ஆகியவற்றைப் போட்டுப் பருகலாம்.
* கருப்பஞ்சாறு கோடைக்கு ஏற்ற சிறந்த பானம். சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும்.
* பெண்கள் வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் "பேக்' போட்டுக் கொண்டால் பிரெஷாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
* வியர்வையைப் போக்கி ப்ரஷ் ஆக இருக்க நான்கு சொட்டு எலுமிச்சம்பழச் சாறை குளிக்கும் தண்ணீரில் சேர்த்து குளிக்கலாம்.
* நுங்குகளை வாங்கி உரித்துக் கையால் பிசைந்து சர்க்கரை, பால், ஏலக்காய் சேர்த்து ப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிட இயற்கையான ஐஸ்க்ரீம் ரெடி.
* கோடை காலத்தில் குழந்தைகளுக்கு வேனல் கட்டிகள் வந்தால் கட்டிகள் மீது நுங்கை மசித்துத் தடவுங்கள்.
* நீராகாரம் அருமையான இயற்கையான பானம். காலையிலும் ஒரு டம்ளர், டிபன் சாப்பிட்டப் பிறகும் ஒரு டம்ளர் அருந்தலாம்.
* கோடையில் மண்பானை நீரைக் குடிக்கிறீர்களா? அதில் சிறிது துளசி இலைகளைப் போட்டுப் பருகுங்கள். உடலுக்கும் நல்லது. உடல் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
* மோர், இளநீர், எலுமிச்சைச் சாறு, பழச்சாறுகள் என்று ஏதாவது ஒன்றை தினமும் அவசியம் பருகுங்கள்.
* வீட்டில் வெயில்படும் இடத்தில் பெரிய கார்டு போர்டு அட்டைப் பெட்டியை படிமானமாகச் செய்து பால்கனி, ஜன்னல் கம்பி வலைக்குள் செருகிவிட்டால் வீட்டிலுள்ளவர்கள் டி.வி. பார்க்கும் போது கிளார் அடிக்காமல் இருக்கும். குளுமையாகவும் இருக்கும்.
* வெயில் காலத்தில் சூட்டினால் வயிற்று வலி வரும். இதற்கு கசகசாவை மிக்ஸியில் அரைத்து கொதிக்க வைத்து பாலோடு சேர்த்து துளி சர்க்கரை போட்டுச் சாப்பிட வயிற்று வலி பறந்து போகும். ஒரு டம்ளர் பாலுக்கு ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி கசகசாவும் போடலாம்.
* கோடை காலத்தில் வாரத்தில் ஒருநாள் இரவு "ப்ரூட் நைட்' என்று வைத்துக் கொள்ளவும். "ஃப்ரூட் சாலட்' சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் சாப்பிட்டால் தெம்பாக இருக்கும். சமையல் செய்யும் வேலையும் மிச்சமாகும்.

Sunday, April 7, 2013

பற்களைப் பற்றித் தெரிந்து கொள்க!

பற்களைப் பற்றித் தெரிந்து கொள்க!


பற்கள்தானே என்று நினைக்காமல், பற்களைப் பற்றி தெரிந்து கொள்வதும், அதனை பாதுகாப்பதும், அதில் ஏதேனும் பிரச்னை ஏற்படின் உடனடியாக சரி செய்வதும் மிகவும் முக்கியமாகிறது.
பிறக்கும் 2000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறக்கும் போதே பல் இருக்குமாம்.
ஒரு கரு பிறக்க 6 மாதம் இருக்கும் முன்பே கருவிற்கு வளர வேண்டிய பற்கள் தயாராகிவிடுகின்றன.
பிறந்த பிறகு முதன் முதலாக முளைக்கும் பற்கள் பால் பற்கள் என்று கூறப்படுகிறது. அவை விழுந்த பிறகு முளைக்கும் பற்கள் கோரைப் பற்களாகும்.
குழந்தை பிறந்து 6வது மாதத்தில் முளைக்கத் துவங்கும் பற்கள் 3 வயதில் முழுமை பெறுகின்றன. 3 வயது குழந்தைக்கு பொதுவாக 20 பற்கள் வளர்ந்திருக்கும்.
பிறகு 5 முதல் 6வது வயதில் ஒவ்வொரு பால் பற்களாக விழத் துவங்கி 12 அல்லது 13 வயதில் அனைத்து பால் பற்களும் விழுந்து கோரைப் பற்கள் அந்த இடத்தை நிரப்புகின்றன.
சிலருக்கு பால் பற்கள் விழும் முன்பே கோரைப் பற்கள் மூளைக்கத் துவங்கி விடுகின்றன. பலர் இரண்டு பற்களையும் ஒருசேர கொண்டிருப்பதும் உண்டு.
நமது பற்களின் மீது இருக்கும் எனாமல்தான், நமது உடலில் உள்ள மிக கடினமான பகுதியாகும்.
மனிதன், உணவை கடிக்க, கிழிக்க, அரைக்க, மெல்ல என நான்கு விதமான பற்களைக் கொண்டுள்ளான்.
ஒரு மனிதனுக்கு இருப்பது போன்ற பற்கள், வேறு யாருக்கும் இருப்பதில்லை. நமது விரல் ரேகைகளைப் போலவே பற்களின் அமைப்பும் தனிச்சிறப்பு வாய்ந்தவை.
நமது பற்களில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளால், உடலில் சில வியாதிகள் ஏற்படுவதும் உண்டு.
நமது பல்லின் மூன்றில் 1 பங்கு பல் ஈறுப் பகுதிக்குள் மூடியுள்ளது. அதாவது, மூன்றில் 2 பங்கு பல்லைத் தான் நாம்மால் பார்க்க முடிகிறது.
ஆரோக்கியமான பற்களை முழு வெள்ளை நிறத்தில் இருக்காது. சிறிது பழுப்பு நிறமாகவே இருக்கும்.
உமிழ் நீரில் உள்ள ஜீலி 7 ன் அளவு குறையும் போது, அதில் உள்ள கால்சியம் மற்றும் உப்புச்சத்து, பற்கள் மேல் படியும் போது அவை காரையாக மாறிவிடுகிறது.
பல் சொத்தை என்பதும் ஒரு பரம்பரை வியாதிதான்.
பற்களை ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தேய்க்க வேண்டும். அதிக நேரம் தேய்ப்பதால் பல் எனாமல் தேய்ந்து போக வாய்ப்பிருக்கிறது.
பொதுவாக எடுப்பான பல் அமைப்பைப் பெற்றிருப்பவர்கள் கம்பி கட்டும் சிகிச்சை முறையைப் பயன்படுத்தி பற்களை சீராக மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். இதனை 18 வயதுக்கு மேல் செய்வது நலம் என்கின்றனர் மருத்துவர்கள்.
தற்போது பற்களை சீராக அமைக்க லேசர் முறைகளும் வந்து விட்டன.
பற்களைக் கொண்டு பாட்டிலைத் திறப்பது போன்றவை பற்களை பாதிக்கும் செயல்கள் என்பதை பலரும் அறிவதில்லை.
பால் பற்கள் முளைத்த குழந்தைகளுக்கு இரவில் சர்க்கரை கலந்த பால் கொடுத்துவிட்டு படுக்க வைப்பதாலும், குழந்தைகளின் பற்கள் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
பற்களை பத்திரமாக பாதுகாக்க நார்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். பழம், காய்கறிகளை கடித்து மென்று சாப்பிடுவது உடலுக்கு மட்டும் அல்லது பற்களுக்கும் நன்மை தரும்

Saturday, April 6, 2013

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!

வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!

First Published : 07 April 2013 12:37 AM IST

"தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள் என முத்திரமாகவும், யாப்பும் அணியும் சேர்ந்து ஐந்திரமாகவும் பிரித்து விரித்துக் கூறப்படுகின்றது. சேக்கிழார்க்கும் சுந்தரமூர்த்தி நாயனார்க்கும் பெரியபுராணத்திற்கும் திருத்தொண்டத் தொகைக்கும் முதற்சொல்லை சிவபிரானே எடுத்துக் கொடுத்தார் என்பர்.
திருவள்ளுவர் குறளுக்கு முதற்சொல்லை எடுத்துக் கொடுத்தவர் தொல்காப்பியரே ஆவார். தொல்காப்பியர், "எழுத்தெனப்படும் அகரமுதல னகரவிறுவாய் முப்பஃது என்ப' என்கின்றார். இந்த இலக்கண நெறியைத் திருவள்ளுவர் தம் முதற் குறளிலேயே "அகர முதல எழுத்தெல்லாம்' என்று எடுத்துக்கூறி, அகரத்தின் முதன்மையை - தலைமையைப் புலப்படுத்தி, தனக்குவமையில்லாத கடவுளுக்கு உவமையாக்கிப் புகழ்ந்திருக்கின்றார். இதனால், திருவள்ளுவர் இலக்கண நெறிக்கு எத்துணை மதிப்புத் தந்துள்ளார் என்பது தெளிவாகிறது. மேலும், "னகரவிறுவாய்' எனத் தொல்காப்பியர் கூறிய இறுதியெழுத்தாகிய னகரத்தைத் தம் நூலின் இறுதிக் குறளில் "கூடி முயங்கப்பெறின்' எனக் கூறி அதனை இறுதியெழுத்தாகவே அமைத்துக் காட்டியுள்ள பெருமை நினைத்தொறும் வியக்கத்தகும் நீர்மையதாகும்'.
 குறிப்பு: "தமிழாகரர்' பேராசிரியர் செ.வேங்கடராமனின் "திறனாய்வுச் சிந்தினைகள்' என்ற நூலில், "திருக்குறளில் இலக்கண நெறி' என்ற கட்டுரையிலிருந்து...

அறிந்ததும்... அறியாததும்.

அறிந்ததும்... அறியாததும்...

"பைபிளை முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர் ஆறுமுகநாவலர்' எனத் தமிழ்மணியில் வெளியான துணுக்குச் செய்தியை மறுத்துள்ள வரலாற்று ஆசிரியர் சி.டேவிஸ் என்பவர், அவ்வாறு மறுப்பதற்கான கீழ்க்காணும் சில ஆதாரங்களை முன் வைத்துள்ளார்.
"கிறிஸ்தவர்களின் பைபிளை (வேதாகமத்தை) முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர் ஜெர்மானியரான சீகன்பால்கு என்பவர். 1682-இல் பிறந்த சீகன்பால்கு இந்தியாவில் உள்ள தரங்கம்பாடிக்கு வந்து கி.பி.1715-ஆம் ஆண்டு புதிய ஏற்பாட்டை தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இதற்கு ஆதாரமாக உள்ளது சீகன் பால்குவின் புதிய ஏற்பாட்டின் முன் அட்டை. ஆனால், ஆறுமுக நாவலரோ கி.பி.1822-ஆம் ஆண்டு பிறந்தவர். தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட பீட்டர் பெர்சிவல் என்பவருக்கு ஆதரவாகத்தான் ஆறுமுக நாவலர் செயல்பட்டார் என்பதுதான் உண்மை.
மேலும், "1708-இல் சீகன்பால்கு என்ற ஜெர்மானியரால் பைபிள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவரால் முடிக்க முடியாத இப்பணியை பெஞ்சமின் சூல்ச் என்பவர் முடித்துள்ளார். 1710-இல் இது அச்சிடப்பட்டுள்ளது. இவ்வாறு "எனது இந்தியா' என்ற நூலில் (பக்.253) பதிவாகியுள்ளது' என்று டி.தங்கசுவாமி என்பவரும் பதிவுசெய்துள்ளார்.
இதில் யார் கூறுவது உண்மை? ஆய்வு செய்யப்பட வேண்டிய வரலாற்றுப் பக்கங்கள் இவை! என்றாலும், அறியாததை அறிந்து கொள்வதும், தவறுகள் திருத்தப்படுவதும், உண்மை பதிவு செய்யப்படுவதும் தானே நியாயம்?

முசுதபாவின் கல்விப்பணி

இந்த வாரம் கலா இரசிகன்


சிங்கப்பூர், மலேசியா வாழ் தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் எம்.ஏ. முஸ்தபா. அவரது முஸ்தபா அறக்கட்டளை ஆற்றும் தமிழ்ப் பணி, அங்கே வாழும் தமிழர்கள் அவரை "முஸ்தபா அண்ணன்' என்றும், "தமிழ் நேசர்' என்றும் அழைக்க வைத்திருக்கிறது. கடந்த மாதம் சிங்கப்பூர் சென்றிருந்த போது, என்னை வலுக்கட்டாயமாக முஸ்தபா சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்கு அழைத்துச் சென்றார்.
"அடேங்கப்பா...' என்று வாயைப் பிளக்க வைக்கிறது அந்த நூலகம். "எங்க நூலகத்தைப் பார்த்து அமைக்கப்பட்டதுதான் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம்' என்று அந்த நூலகத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் புஷ்பலதா நாயுடு சொன்னபோது, அவரது முகத்தில் பெருமை பிடிபடவில்லை. ஒவ்வொரு பகுதியாக அழைத்துச் சென்று, தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதை விளக்கினார். கவிஞர் வைரமுத்து சிங்கப்பூர் வந்தால், "என்னைத் தனியே விடுங்கள்' என்று கூறி அந்த நூலகத்திற்குள் தஞ்சம் புகுந்து விடுவாராம். நுழைந்தால் வெளியேவரத் தோன்றாது என்பதை நேரில் பார்த்து உணர்ந்தேன். ஒரு நூலகம் எப்படி இருக்க வேண்டும் என்றால், சிங்கப்பூர் தேசிய நூலகம் போல் இருக்க வேண்டும்.
முஸ்தபாவின் அலுவலகத்திற்குச் சென்றபோது, அங்கே இன்னொரு இன்ப அதிர்ச்சி. அவரது நாற்காலிக்குப் பின்னால் "தினமணி'யில் வெளியான கட்டுரை பிரேம் செய்து மாட்டப்பட்டிருக்கிறது.
முஸ்தபா அண்மையில் யாழ்ப்பாணம் சென்று வந்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். நிறைய புகைப்படங்களைக் காட்டினார். யாழ்ப்பாணம் நூல் நிலையத்தை எப்படிப் பழைய நிலைமைக்குக் கொண்டு வருவது என்பது பற்றி விவாதித்தார். மலேசிய, சிங்கப்பூர் எழுத்தாளர்களின் படைப்புகளை எல்லாம் தேடிப் பிடித்துத் திரட்டி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முஸ்தபா அறக்கட்டளையின் சார்பில் "தமிழ்வேள்' கோ. சாரங்கபாணியின் பேரில் ஒரு இருக்கை நிறுவப்பட்டு, அந்தப் புத்தகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இப்போது, யாழ்ப்பாணம் நூலகத்தையும் பழைய நிலைமைக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறார் முஸ்தபா. பழைய தமிழ் நூல்களைத் திரட்டி யாழ்ப்பாணம் நூலகத்துக்குக் கொடுக்க என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.
சிங்கப்பூரில் கொடிகட்டிப் பறக்கும் முஸ்தபாவுக்கு, தான் பிறந்த முத்துப்பேட்டையை ஒரு சிங்கப்பூராக்க முடியாவிட்டாலும், சிங்கப்பூரில் உள்ளதுபோல ஒரு பள்ளிக்கூடம் நிறுவ வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டதில் வியப்பொன்றும் இல்லை. பொறியியல் கல்லூரிகளும் மருத்துவக் கல்லூரிகளும் அமைத்து, கோடிகளை சம்பாதிக்க வழிதேடும் காலகட்டத்தில், சம்பாதித்த பணத்தைக் கொட்டி, சர்வதேசத் தரத்தில், குறைந்த கட்டணத்தில், தான் பிறந்த ஊரில் ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்று ஒருவர் நினைத்தால், நிச்சயமாக அந்த எண்ணத்தைப் போன்ற உயர்ந்த மனிதராகவும் அவர் திகழ்வார் என்பதில் என்ன சந்தேகம்?
சிங்கப்பூர் தரத்தில் முத்துப்பேட்டையில் பள்ளிக்கூடம் நிறுவியிருப்பதுகூடப் பெரிதல்ல. பெண்களுக்கான பள்ளிக்கூடம் நிறுவியிருக்கிறாரே, அது அதனினும் சிறப்பு. 17 ஆண்டுகளுக்கு முன்னால், பத்து ஏக்கர் நிலப்பரப்பில் தனது தாயார் ரஹ்மத் அம்மாளால் முத்துப்பேட்டையில் திறந்து வைக்கப்பட்ட அந்தப் பள்ளியில் 1,500 மாணவியர் இப்போது படிக்கிறார்கள். முத்துப்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில், ரஹ்மத் பெண்கள் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் படிப்பது என்பது பெருமை.
இந்தப் பள்ளியைத் தொடங்கியதற்கான
காரணத்தை முஸ்தபா கூறியபோது, நான் நெகிழ்ந்து போனேன். அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா?
""வருஷா வருஷம் விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டால், எங்கள் மாவட்டத்தில், குறிப்பாக, முத்துப்பேட்டை பகுதியில் எப்போது, என்ன விபரீதம் நடக்குமோ என்கிற அச்சம் இந்து, முஸ்லிம் இரு தரப்பினர் மத்தியிலும் இருந்து வந்தது. இப்படி ஒரு பள்ளியைத் தொடங்கி, இந்துக்கள், முஸ்லிம்கள் இரு தரப்பினரின் பெண் குழந்தைகளையும் ஒன்றாகப் படிக்க வழிகோலிய பிறகு, பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது. இப்போது பிரச்னையே இல்லை. நான் எதிர்பார்த்தது நடந்தது!'' என்று பெருமிதத்துடன் கூறினார் முஸ்தபா.
ஊருக்கு ஒரு முஸ்தபா தோன்றினால் என்ன என்று என் உள் மனதில் ஏக்கம் பிறக்கிறது!
*  *  *  *
எத்தனை எத்தனையோ எழுத்தாளர்கள் வந்துவிட்டனர். நானும் நாள்தோறும் பல சிறுகதைகளைப் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், தமிழ்ச் சிறுகதைகளின் பொற்காலம் கடந்த நூற்றாண்டுடன் முடிந்துவிட்டது என்பது எனது கருத்து. அதற்குக் காரணம், அந்தக் கதைகள் வாசகனைக் கதையுடன் ஒன்ற
வைத்தன. அவனது மென்மையான உணர்வுகளைத் தொட்டு, உணர்ச்சிகளைத் தூண்டின.
இன்றைய தன்னுணர்வுச் சிறுகதைகளில் பல கட்டுரைகளாகத் தோற்றமளிப்பதற்குக் காரணம், அவை ஜனரஞ்சகத்திலிருந்து விடுபட்டு, ஒரு தனிமனித எண்ண ஓட்டத்தை மட்டுமே பிரதிபலிப்பதுதான். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கும், பிரதிபலிக்கும் சம்பவங்கள் மற்றும் பிரச்னைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட அன்றைய கதைகளில் இருந்த ஈர்ப்பு, இன்றைய பெருவாரியான சிறுகதைகளில் காணப்படுவதில்லை. அதற்காக, நான் எல்லா சிறுகதைகளும் அப்படி என்று சொல்ல வரவில்லை.
சமீபத்தில், தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய பத்து சிறுகதைகளின் தொகுப்பான "சேற்றில் மலர்ந்த செந்தாமரை' என்கிற புத்தகத்தைப் படித்தேன். படிக்கத் தொடங்கியபோது மணி இரவு (அதிகாலை ?) இரண்டு. முடித்தபோது பொழுது புலர எத்தனித்துக் கொண்டிருந்தது. சென்னையில்தான் சேவல் கூவாதே. காக்காக்களின் சலசலப்பு கேட்கத் தொடங்கி இருந்தது.
ஒவ்வொரு சிறுகதையும், ஒன்றை மற்றொன்று விஞ்சுவதாக இருந்தது. ஒவ்வொரு கதையிலும் ஒரு செய்தி இருந்தது; சமுதாயப் பிரச்னை இருந்தது; கதையும் இருந்தது. ஒவ்வொரு கதையின் முடிவிலும் அந்தக் கதை எழுதப்பட்ட ஆண்டு குறிப்பிட்டிருப்பது, அந்தக் கதை பிறந்த காலத்தையும், அந்தக் கதையை எழுதத் தூண்டிய சமுதாய அரசியல் சூழ்நிலையையும் உணர்ந்தறிந்து சொல்வதற்குத்தான் என்று ரகுநாதன் குறிப்பிட்டிருப்பது உண்மை.
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் வெளிவந்துள்ள கதைகளில் பல ரஷ்ய மொழியில் மட்டுமன்றி, செக், ஹங்கேரி, போலிஷ், இந்தி முதலிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டவையாம். முதன் முதலில் ஐரோப்பிய மொழி ஒன்றில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட தமிழ் நாவல் தொ.மு.சி. ரகுநாதனின் "பஞ்சும் பசியும்'தான், தெரியுமா?
"ஐந்து ஏக்கர் நிலம்' என்றொரு கதை. பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை எதிர்த்துப் போராடிய தியாகி சங்கரன், சுதந்திர இந்தியாவில் தியாகிகளுக்குத் தரப்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதுதான் கதை. தந்தை அருணாசலம் பிள்ளைக்கும், மகன் சங்கரனுக்கும் இடையில் நடக்கும் வாக்குவாதங்களை, இன்றைய அரசியல்வாதிகளுக்குப் படித்துக் காட்ட வேண்டும். அப்போதாவது அவர்களுக்குத் தியாகம், தேசப்பற்று, பொது வாழ்க்கையின் நோக்கம் பற்றிய உணர்வு ஏற்படாதா என்கிற நைப்பாசைதான் காரணம்.
*  *  *  *
எனது டைரியில் குறித்து வைத்திருந்த கவிதை இது. எழுதியவர் பெயர் மேஹாஷ். எப்போதோ ஆனந்த விகடனில் படித்த கவிதையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சாலைகளில், ஓட்டல் வாசல்களில்
தெரு முனைகளில், கோயில்களில்,
வயதான மூதாட்டி கையேந்தும் போதெல்லாம்
குறுகுறுக்கிறது
போன மாதம் வீட்டுக்குப் பணம் அனுப்ப
மனசில்லாத மனசு!