இதய நோய்: வருமுன் காப்போம்
உடல் நலத்தையும் மன நலத்தையும் காத்தால்தான்
மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும். உடல் நலம் காக்க
மருத்துவப் பரிசோதனை அவசியம்.
பொக்கிஷமான நம் உடல் ஆரோக்கியத்தை அடிக்கடி பரிசோதனை செய்து பார்த்துக்
கொள்கிறோம். பல எளிய பரிசோதனைகள் மூலம் நம் தினசரி வாழ்க்கை
பாதிக்கப்படாமல் பல மருத்துவ ரீதியான ஆய்வு முடிவுகளைத் தெரிந்து
கொள்கிறோம்.
சில நுணுக்கமான முக்கியமான இதயம் போன்ற உறுப்புகளுக்கான பரிசோதனைகளை
செய்யச் சொல்லி மருத்துவர் கூறினாலும், மருத்துவமனையில் தங்க
வேண்டியிருக்குமோ, அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி வருமோ என்ற பயத்தில்
ஆஞ்சியோகிராம் போன்ற பரிசோதனைகளைச் செய்யாமல் தவிர்த்து விடுகிறோம்.
மருத்துவரிடமும் தாற்காலிக மருத்துவப் பரிந்துரை வாங்கிக் கொண்டு நலம்
அடைந்து விட்டாலே திருப்தியடைகிறோம். உண்மை நிலை தெரியாமலே நாமே நம்
ஆரோக்கியத்தை மேலும் கெடுத்துக் கொள்கிறோம். மருத்துவர் முதலில் கூறியபடி
உடனே பரிசோதித்திருந்தால் பிரச்னையை ஆரம்பத்திலேயே தவிர்க்கலாம். உதாரணமாக
இதயத்தின் ரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்பினை மூன்று வகையாகப்
பிரிக்கலாம்.
1. ஊஹற்ற்ஹ் நர்ச்ற் ஊப்ஹந்ங்ள்--இதை ஆரம்ப காலத்தில்
கண்டறிந்துவிட்டால் உணவுக் கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம்
மூலம் சரி செய்து விடலாம். தொடர் மருத்துவ உதவிகூட தேவை இருக்காது.
2. ஙண்ஷ்ங்க் ஊப்ஹந்ங்ள் மற்றும் 3. இஹப்ஸ்ரீண்ச்ண்ங்க்
நற்ங்ய்ர்ஸ்ரீண்ள்ற் அழ்ற்ங்ழ்ண்ங்ள் போன்ற பாதிப்புகளையும் ஆரம்ப நிலையில்
அறுவைச் சிகிச்சை இல்லாமல் எளிதில் குணப்படுத்திவிடலாம். ஆனால் நாம்
செய்வதில்லை.
இது போன்ற அறியாமையை நீக்கி நோயிலிருந்து உங்களை காக்க ஆக்ஸிமெட்
மருத்துவமனை, "மூன்' தொலைக்காட்சியுடன் இணைந்து கேள்வி-பதில் நிகழ்ச்சியை
நடத்துகிறது.
"மூன்' டிவியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை காலை 11.00 - 12.00 மணி
வரை ஆக்ஸிமெட் தலைமை மருத்துவர் டாக்டர் அயாஸ் அக்பர் இதயம் தொடர்பான
உங்கள் சந்தேகங்களுக்கு வாரந்தோறும் பதிலளிக்கிறார். பார்த்துக் கேட்டு
அனைவரும் பயனடையலாம்; இதய நலம் காக்கலாம்.
No comments:
Post a Comment