1. கிடைக்கக்கூடிய பூக்களைக் கொண்டு பூங்கொத்து செய்வதுதான் மகிழ்ச்சி தரும் காரியம்.2. கடலைப் புகழ வேண்டும் என்றால் கரையில் நிற்க வேண்டும்.3. நாயுடன் மனிதன் நட்புகொள்வதற்குக் காரணம், அது பேசாமல் வாலை மட்டும் ஆட்டிக் கொண்டிருப்பதுதான்.4. அன்பை அறிந்த இதயத்திற்குத்தான், அது எவ்வளவு உயர்வானது என்று சொல்ல முடியும்.5. பொறுமை எனும் மரத்தின் வேர்கள் கசப்பானவைதான். ஆனால், அதன் கனிகள் இனிப்பானவை.6. வரலாற்றை உருவாக்குபவனுக்கு அதை எழுதுவதற்கு நேரமிருக்காது.7. வலிமை எஜமானனாகும்போது, நீதி வேலைக்காரனாகிறது.8. ரசிக்கத் தெரியாத மனிதனின் கண்கள் அழைக் காண்பதில்லை.9. உண்மையற்ற சமாதானம் ஆபத்தானது.10. ஒரு நல்ல நண்பன், நம்மிடம் உள்ள செல்வங்களைவிட மேலானவன்.
Friday, October 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment