வின்மணி சிந்தனை
நல்லதையே மட்டும் செய்ய நினையுங்கள் அதையே சொல்லுங்கள்
யார் நமக்கு தொந்தரவு கொடுத்தாலும் கவலைப்படாதீர்கள் காலம்
கண்டிப்பாக ஒரு நாள் பதில் சொல்லும் நாம் யார் என்று காட்டும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
2.இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலப்படம் எது ?
3.இந்தியாவில் வருமான வரி புழக்கத்திற்க்கு வந்த ஆண்டு எது ?
4.ஓமன் தலைநகரம் எது ?
5.சிற்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
6.கங்கை உற்பத்தியாகும் இடம் எது ?
7.புன்னகை நாடு என்று அழைக்கப்படும் நாடு எது ?
8.காந்தியடிகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை என்ன ?
9.பொற்கோவில் நகரம் எது ?
10.அமிலங்களின் சுவை என்ன ?
பதில்கள்:
1.கெப்ளர்,2.நூர்ஜஹான், 3.1860-ல்,4. மஸ்கட்
5.15 ஆண்டுகள்,6.கோமுகம் ,7.தாய்லாந்து, 8. ராம்
9.அமிர்தசரஸ்,10.புளிப்பு
இன்று மே 3
பெயர் : சுஜாதா ,
பிறந்த தேதி : மே 3, 1935
தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில்
ஒருவராவார்.இயற்பெயர் ரங்கராஜன்.தனது
தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர்
பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.சிறுகதைகள்,
நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள்,
கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி
நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
இன்று மே 2
பெயர் : லியொனார்டோ டாவின்சி
மறைந்த தேதி : மே 2, 1519
ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக்
கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும்,
பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும்
ஆவார். ஒரு பல்துறை மேதையாகக்
கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான
ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி
விருந்து" (The Last Supper), "மோனா லிசா" (Mona Lisa)
போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
வின்மணி சிந்தனை
நாம் வரிசையில் சென்று கொண்டிருக்கும் போது சிலர் நம்மை
முந்தி அவர்கள் காரியத்தை சாதித்துக்கொள்வார்கள் ஆனால்
உண்மையிலே அவர்களுக்கு அது பலன் தராது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.முதன் முதலில் மின்சார இரயில் ஓடிய நாடு எது ?
2.போக்குவரத்து காவலர்களே இல்லாத நாடு ?
3.மனிதனின் தலைமுடி வருடத்திற்க்கு எவ்வளவு வளர்கிறது ?
4.மாம்பழத்தின் பிறப்பிடம் எந்த நாடு ?
5.சீனாவின் புனித விலங்கு ?
6.உலகிலேயே மிகவும் பழமையான தேசியக்கொடி எது ?
7.தங்கப்போர்வை நிலம் எது ?
8.தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
9.உலகிலேயே மிகப்பெரிய பாம்பு எது ?
10.சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?
பதில்கள்:
1.ஜெர்மனி 1881,2.நியூசிலாந்து, 3.6 அங்குலம்,
4. இந்தியா,5.பன்றி,6.டானிஷ் நாட்டு கொடி,7.ஆஸ்திரேலியா,
8.ஒரு முறை,9.அனகோண்டா, 10.பிட்மேன்
இன்று மே 1
உலகத் தொழிலாளர் தினம்
தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான
போராட்டமும், சிகாகோ தியாகிகளின்
தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக
உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.
இந்நாளில் அனைத்து உழைப்பாளர்களுக்கும்
இதயம் கனிந்த அன்பான வாழ்த்துக்கள்
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
வின்மணி சிந்தனை
ஆபத்து காலத்தில் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல்
உதவி செய்யும் நபருக்கு பெயர் தான் “ நண்பன் “
நாம் சென்ற பின் நம்மை பற்றி புறங்ககூறுபவன் உண்மையான
நண்பன் இல்லை.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.எந்த கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்கள் பகலாகவே இருக்கும் ?
2.நதிகள் இல்லாத நாடு எது ?
3.சாணத்திலிருந்து கிடைக்கும் வாயு என்ன ?
4.சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
5.காசநோய் எந்த உறுப்பை பாதிக்கும் ?
6.ஈரானின் பழைய பெயர் என்ன ?
7.யானை தினமும் எவ்வளவு தண்ணீர் அருந்தும் ?
8.பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது ?
9.இந்தியாவின் மிகச்சிறிய வாக்குச்சாவடி எந்த மாநிலத்தில்
உள்ளது ?
10.லில்லி பூக்களை உடைய நாடு எது ?
பதில்கள்:
1.செவ்வாய் கிரகம்,2.சவூதி அரேபியா, 3.மீத்தேன்,
4.முகாரி ,5.நுரையீரல்,6.பாரசீகம்,7. 200 லிட்டர்,
8.55 மொழிகளில்,9.அருணாசலப்பிரதேசம், 10.கனடா
இன்று ஏப்ரல் 30
பெயர் : தாதாசாஹெப் பால்கே,
பிறந்த தேதி : ஏப்ரல் 30, 1870
தாதாசாஹெப் பால்கே என்று அழைக்கப்படும்
துண்டிராஜ் கோவிந்த் பால்கே(Dhundiraj Govind
Phalke)இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக
கருதப்படுகிறார்.தாதாசாஹெப் பால்கே நாசிக்கில்
பிறந்தார்.1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை
உருவாக்கினார்.பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே
இயக்கவும் செய்தார்.அவருடைய நினைவாக தாதாசாஹெப்
பால்கே விருது நிறுவப்பட்டது.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
வின்மணி சிந்தனை
நல்ல கணினி கொள்ளையருக்கு யாருக்கும் தீங்கு செய்ய
மனம் வராது அரை குறை உள்ளவன் கண்டிப்பாக அடுத்தவனுக்கு
கெடுதல் செய்ய நினைத்து தான் ஏமாந்து போவான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இரத்த ஓட்டம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?
2.மீன்களில் அதிவேகமாக நீந்தும் மீன் எது ?
3.நுரையிரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன ?
4.எறும்பின் சராசரி ஆயுள் என்ன ?
5.நீரில் எந்த அளவு ஆக்சிஸன் உள்ளது ?
6.இந்தியாவின் அட்டர்னி ஜெனரலை நியமிப்பவர் யார் ?
7.உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் சென்டர் எங்குள்ளது ?
8.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
9.அம்ரிக்காவில் அடிமைமுறையை ஒழித்தவர் ?
10.அகத்திக்கீரையில் உள்ள வைட்டமின் எது ?
பதில்கள்:
1.லூயிஸ்,2.சுறா மீன், 3.புளுரா, 4. 15 ஆண்டுகள்,
5.88.9%,6.குடியரசுத்தலைவர்,7.அமெரிக்கா,8.6 கி.மீ,
9. ஆபிரகாம் லிங்கன், 10.வைட்டமின் ஏ
இன்று ஏப்ரல் 29
பெயர் : ரவி வர்மா,
பிறந்த தேதி : ஏப்ரல் 29, 1848
நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில்
வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப்பாணி
ஓவியக்கலைக்குள் புகுத்தியவர்.உலகப்புகழ்
பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர்.
உங்களால் பாரததேசத்திற்க்கு பெருமை.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
வின்மணி சிந்தனை
அண்ணதானம் சாப்பிட வந்துவிட்டு சாப்பாட்டில் அது சரியில்லை
இது சரியில்லை என்று கூறும் நபர்களின் குடும்பம் ஒற்றுமை
இல்லாமல் சென்றுவிடும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த் ஆண்டு எது ?
2.பன்றியின் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப்போகும்
நாடு எது ?
3.வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ?
4.நின்றபடியே தூங்கும் பிராணி எது ?
5.இந்திய மக்களின் முக்கிய உணவுப்பொருள் எது?
6.வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ?
7.விவசாய உற்பத்தியில் முன்னணியில் நிற்க்கும் மாநிலம் எது ?
8.உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை ?
9.சூரியனின் வயது ?
10.பிரமிடுகளின் பிறப்பிடம் எது ?
பதில்கள்:
1.1964,2. தாய்லாந்து, 3.ஈசல், 4. குதிரை,
5.அரிசி,6.ஆறுகள்,7. பஞ்சாப்,8.9 பிரிவுகள்,
9. 500 கோடி ஆண்டுகள், 10.எகிப்து
இன்று ஏப்ரல் 28பெயர் : உ.வே.சாமிநாதையர்,
பிறந்த தேதி : ஏப்ரல் 28, 1942
பலரும் மறந்து அழிந்துபோகும் நிலையிலிருந்த
பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத்
தேடி அச்சிட்டு பதிப்பித்தவர்.இருபதாம்
நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத்
தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதையர்
குறிப்பிடத்தக்கவர். தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால்
தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும்
உலகறியச் செய்தவர். உங்கள் தமிழ் சேவைக்கு என்றும் நன்றி.
No comments:
Post a Comment