Thursday, July 16, 2009

உங்கள் பக்கம்



மத்தியதரைக் கடலின் திறவுகோல்!

* உலகில் அகதிகள் அதிகம் வசிக்கும் நாடு ஆப்கனிஸ்தான்.
* மத்தியதரைக் கடலின் திறவுகோல் என ஜிப்ரால்டர் நதி அழைக்கப்படுகிறது.
* இந்தியா, பாகிஸ்தான் இடையேயான காலநேர வித்தியாசம் அரைமணி ஆகும்.
* மாவீரன் அலெக்ஸôன்டரின் காலம் கி.மு.நான்காம் நூற்றாண்டு.
* அதிகளவில் காபி விளையும் நாடு பிரேசில்.
- ஆர்.ஜி.காயத்ரி, திசையன்விளை.

கருங்கடல்!

* காஸ்பியன் கடல் என்பது பெரிய ஏரி. இந்த நீர் உப்புத் தன்மை உடையது.
* உலகின் மிகப் பெரிய கடலான பசிபிக் பெருங்கடலின் அடியில் மிகப் பெரிய மலைகள் உள்ளன.
* கருங்கடல் தென்கிழக்கு ஐரோப்பாவை சுற்றி வலம் வரும் மிகப் பெரிய கடல். குளிர்காலத்தில் மூடுபனியால் இக்கடல் தண்ணீர் கருப்பாக தெரிவதால் இப்பெயர் வந்தது.
* 54 சிறிய தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவாக சிங்கப்பூர் உள்ளது.
- டி.வி.கிருஷ்ணமூர்த்தி, நங்கநல்லூர்.

7 பற்றி ஏழு செய்திகள்!

* முள்ளம் பன்றி ஒரே சமயத்தில் 7 குட்டிகளை ஈனும்.
* ரோம் நகரம் ஏழு மலைகளின் மேல் அமைந்துள்ளது.
* உலகில் ஏழு கோடி குதிரைகள் உள்ளன.
* ஜெல்லி மீன் ஏழு மாதங்கள் வரை உயிர் வாழும்.
* பாப்ளர் என்ற பறவை ஏழு ஏழாக பறக்கும்.
* ஏழு சகோதரிகள் என அழைக்கப்படுபவை அருணாசலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிúஸôராம், நாகாலாந்து, திரிபுரா. இவை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் ஆகும்.
- நெ.இராமன், சென்னை-74.

சார்லி சாப்ளின்!

* கோல்கத்தாவில் சார்லி சாப்ளினுக்கு சிலை உள்ளது.
* மனித உடலில் 457 தசைகள் உள்ளன.
* நண்டு பக்கவாட்டில் நடக்கும் திறன் கொண்டது.
* கடல் நீரில் சராசரியாக 35 சதவீதம் உப்பு உள்ளது.
* நமது நாட்டில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட மாநிலம் உத்தரப்பிரதேசம்.
* உலகின் மிகப் பழமையான நகரம் டமாஸ்கஸ்.
- முருகேசன், தேனி.

தொழில்புரட்சி நடைபெற்ற முதல் நாடு!

* இந்தியாவில் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாகக் கொண்ட மாநிலம்
நாகாலாந்து.
* மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப் பயிற்சி அளிக்கிறது ஜப்பான்.
* முதன்முதலில் தொழில்புரட்சி நடைபெற்ற நாடு
இங்கிலாந்து.
* உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
- எம்.சாரு, சென்னை-71.

வங்கதேசத்தின் முதல் பிரதமர்!

* புறாக்கள் இரண்டு முட்டைகளே இடும். பெரும்பாலும் சுத்தமான நீரையே குடிக்கும்.
* லயன், ஓமர் என்ற இனப் புறாக்களே பந்தயப் பிரியர்களால் வளர்க்கப்படுகிறது.
* சமாதானத்தின் சின்னமாக புறாவையே உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
* அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.
* ஐ.நா.சபையின் முதல் பொதுச் செயலாளர் டிரிக்வி லீ.
* வங்கதேசத்தின் முதல் பிரதமர் முஜிபுர் ரஹ்மான்.
மு.தமிழ்ப்பாண்டியன்,
வில்லிவாக்கம்.

லிட்டில் பாய்!

* உலகில் 757 மிருகக்காட்சி சாலைகள் உள்ளன.
* தாமரை மலரில் வெண்தாமரை, செந்தாமரை ஆகியன இரு முக்கிய வகைகள்.
* நாகாலாந்து மாநிலத்தின் தலைநகர் கோஹிமா.
* ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரத்தின் மீது வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் லிட்டில் பாய்.
* நவீன இத்தாலியின் தந்தை என அழைக்கப்படுபவர் கரிபால்டி.
* பிரிட்டனின் முதல் பெண் பிரதமர் மார்க்ரெட் தாட்சர்.
* இத்தாலி நாட்டின் தேசிய மலர் லில்லி.
- வெ.இராஜாராம், சங்கரன்கோவில்

மிகப் பெரிய மரம்!

* உலகிலேயே மிகப் பெரிய அரண்மனை வாட்டிகன் அரண்மனை.
* உலகிலேயே மிகப் பெரிய மரம் கலிபோர்னியாவில் உள்ள ரெட்வுட் மரம்.
* மிகப் பெரிய வைரச் சுரங்கம் கிம்பர்லி சுரங்கம்.
* உலகில் மிக உயரத்தில் உள்ள ஏரி நியூயார்க்கில் உள்ள கிரான்ட் சென்ட்ரல் ஏரியாகும்.
* இந்தியாவின் மிக நீளமான அணை ஹீராகுட் அணை.
* ரோமானிய பேரரசர் ஜூலியஸ் சீசர்தான் பொது மக்களுக்காக முதன்முதலாக பொது நூலகங்களைக் கட்டியவர்.

- இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு.

No comments:

Post a Comment