வந்தவர்: ஒருமாதிரி சந்தோஷமா போய்கிட்டு இருக்கு...
ஜோசியர்: கவலைப்படாதீங்க, அந்த தோஷத்துக்கு ஒரு பரிகாரம் பண்ணிடுவோம்!
-சாமு,
401, 4-வது தளம்,
மாதவ நகர் காலனி,
மியாபூர்,
ஹைதராபாத் 500 050,
ஆந்திரப் பிரதேசம்.
* ஒருவர்: என்னது கூட்டம் நடக்கிற ஹாலின் நடுவில் ஒரு பக்கெட் நிறையத் தண்ணீர் வச்சிருக்காங்க...!
மற்றவர்: ஆமா, கூட்டத்தில சில முக்கிய பிரச்னைகளை அலசி ஆராயப் போறாங்களாம்..!
-புரூஸ்லீ ஓவியாலயம்,
நாட்டரசன்கோட்டை.
* ஆசிரியர்: கோவிந்தசாமி சார்! உங்க பையன் உங்க பேரைக் கெடுத்துடுவான்னுதான் தோணுது!
இவர்: என்னாச்சு சார்?
ஆசிரியர்: விண்ணப்பத்துல தந்தையின் பெயர்ங்கிற இடத்துல "கேவிந்தசோமி'ன்னு எழுதி வச்சிருக்கான் சார்!
-சீர்காழி ரேவதி, சென்னை.
* ஆசிரியர்: பூமி தன்னைத்தானே சுத்தி சூரியனைச் சுத்துமா? இல்லை சூரியன் தன்னைத்தானே சுத்தி பூமியைப் சுத்துமா?
மாணவன்: எனக்குத் தலையச் சுத்துது சார்...
-எஸ்.பவித்ரா, கொத்தூர்.
* டாக்டர்: உங்க எடை அதிகமாயிருக்கு, குறைக்கணும்...
வந்தவர்: எடையைக் குறைக்க என்ன சாப்பிடணும்னு சொல்லுங்க டாக்டர்..!
-டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.
* ஆசிரியர்: மாணவர்களே, தங்கம் எங்கிருந்து கிடைக்குது?
மாணவன்: மாமியார் வீட்டிலிருந்து சார்...
-எஸ்.கோபு, ஆண்டிபட்டி (அஞ்சல்),
வெட்டுக்காடு (வழி), செங்கம் தாலுகா,
திருவண்ணாமலை 606 703.
No comments:
Post a Comment