Saturday, May 4, 2013

தெரிந்துகொள்ளுங்கள்...03.05.2013

தெரிந்துகொள்ளுங்கள்...

தெரியுமா?

• முதன்முதலாகத் தனியாகப் படகில் உலகம் சுற்றி வந்த பெண் என்ற சிறப்பைப் பெற்றவர் லிசா கிளேடன். இவர் இங்கிலாந்தின் பர்மிங்ஹாமைச் சேர்ந்தவர். இவர் உலகைச் சுற்றி வர எடுத்துக்கொண்ட காலம் 9 மாதங்கள்.
-முக்கிமலை நஞ்சன்

• நகல் எடுப்பதை ஜெராக்ஸ் என்று சொல்லுகிறோம். ஜெராக்ஸ் என்பது
ஒரு நிறுவனத்தின் பெயர். அந்த நிறுவனம் தயாரித்தளிக்கும் "போட்டோ
காப்பியர்' என்ற இயந்திரத்தின் மூலம் நாம் நகல் எடுக்கின்றோம்.
-த.ஜெகன், சரலூர்.

• "ஹரிக்கேன்' என்பது புயலைக் குறிக்கும் சொல். புயல் காற்றிலும் அணையாமல் எரிந்த மண்ணெண்ணெய் விளக்கே "ஹரிக்கேன் விளக்கு' என்று அழைக்கப்பட்டது. அந்தப் பெயரே இப்போதும் தொடர்கிறது.
-ஆ.திலீபன்,
திருநெல்வேலி.

• சந்திரனின் மனிதன் முதன்முதலாக ஓட்டிச் சென்ற வண்டியின் டயர்கள், பியானோ இசைக் கருவியில் பயன்படுத்தப்படும் ஒயர் கம்பிகளாலானவை.

• ஸ்பெர்ம் திமிங்கிலத்தின் நெற்றியில் மட்டும் இரண்டாயிரம் லிட்டர் அளவுக்கு எண்ணெய் இருக்கும்.

• உலகிலேயே கடல் மட்டத்துக்குக் கீழே இருக்கும் நாடுகளில் அதிகமாக மக்கள் வசிக்கும் நாடு ஹாலந்து மட்டும்தான்.
-ஜி.அருள்குமார், மன்னார்குடி.

• பாம்பு தோல் உரிப்பதற்கு ஒருவாரம் முன்பு அதன் கண்களும் உடம்பும் நிறம் மாறும்.

• சென்னை மெரீனா கடற்கரையை வடிவமைத்து அதற்குப் பெயரிட்டவர் கிராண்ட் டம் என்பவர். இவர் ஸ்காட்லாந்துக்காரர். ஆங்கிலேய ஆதிக்கத்தில் இந்தியா இருந்த சென்னை மாகாணத்தின் கவர்னராக இருந்தவர்.

• இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை ஏற்படுத்திய ராபர்ட் கிளைவ்தான் தமிழ்நாட்டில் மைல் கற்களை சாலைகளில் முதன்முதலில் நட்டு வைப்பதற்கு ஏற்பாடு செய்தவர்.
-மல்லிகா அன்பழகன், சென்னை.

6 செய்திகள்


• இரண்டாம் உலகப் போர் 6 ஆண்டுகள் நடைபெற்றது.

• கரடி 6 மாதத்துக்குள் குட்டியை ஈனும்.

• நீரைவிட ரத்தம் 6 மடங்கு அடர்த்தியானது.

• வைரத்துக்கு 6 பட்டைகள் தீட்டப்படுகின்றன.

• கழுகு 6 கிலோமீட்டர்கள் வரை சிறகுகளை அசைக்காமல் பறக்கக்கூடியது.

• ஒட்டகம் 6 அடி உயரம் இருக்கும்.

• மனித உடலில் 6 லிட்டர் ரத்தம் உள்ளது.

• தென்றல் காற்று 6 கி.மீ. வேகத்தில் வீசும்.
-நெ.இராமன், சென்னை.

ஆட்டிசம்!

ஆட்டிசம் என்பது நோய் அல்ல குறைபாடு.
குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடுதான் ஆட்டிசம் எனப்படுகிறது. இது குறித்தும் பெற்றோர்கள் அறிந்து கொண்டாலும் உரிய நேரத்தில் டாக்டரை அணுகுவதில்லை.
சரி, இந்தக் குறைபாட்டை எப்படிக் கண்டுகொள்வது?

• ஆறு மாதங்களாயினும் தாய் முகம் பார்த்து குழந்தை சிரிக்காமல் இருத்தல்.

• 12 மாதங்கள் ஆன பின்பும் மழலைச் சத்தங்கள் எழுப்பாமலிருத்தல்.

• எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல்

• 18 மாதங்களில் பேசினாலும் ஒரே சப்தத்தையோ, சொல்லையோ திரும்பத் திரும்பச் சொல்லுதல்.

• கைகளை அடிக்கடி உதறுதல்.

• தூக்கமின்மை அல்லது தூங்கும் நேரம் குறைவாக இருத்தல்.

• ஒரு பொருளையோ, நபரையோ சுட்டிக்காட்ட இயலாமை.
இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று குழந்தையிடம் இருந்தாலும் தாமதிக்காமல் குழந்தை நல மருத்துவரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.
-பி.சையது ஸஜ்ஜாத், 9-ஆம் வகுப்பு,
நாகமணி அம்மாள் நினைவு மெட்ரிக்
மேல்நிலைப் பள்ளி, கம்பம்.

No comments:

Post a Comment