Showing posts with label முத்துக்கமலம். Show all posts
Showing posts with label முத்துக்கமலம். Show all posts

Thursday, December 15, 2011

Jokes from muthukamalam : சிரிக்க சிரிக்க - இளைய பெண்ணைக் கட்டித் தருவீர்களா?



சிரிக்க சிரிக்க-67
-தஞ்சை ஹேமலதா.
http://www.muthukamalam.com/picture/smilea.jpg
ஒருவன்: மாட்டுக்கு பொங்கல் வைக்கும் போது மாடு ஏன் உன்னை முட்டுச்சு...
மற்றவன்: பொங்கலில் இருந்த முந்திரியை எடுத்து திண்ணுட்டேன்.
*******
கணவன்: என்னடி சர்க்கரை பொங்கல் வெள்ளையா இருக்கு"

மனைவி: பொங்கலிலே சர்க்கரை போட்டிருக்கேன்...!
*******
ஒருவன்: மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...
மற்றவன்: உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?
*******
ஒருவன்: நேத்து புதுப்படம் பார்க்கப் போனியே படம் எப்படி?
மற்றவன்: இடைவேளை நல்லா இருந்தது...!
*******
ஒருவன்: என்ன வெறும் ரவுடிகள் கூட்டமா இருக்கு..?

மற்றவன்: ஏட்டு ஏகாம்பரம் மகளுக்கு கல்யாணமாம்!
http://www.muthukamalam.com/picture/mayil.jpg

joke: சிரிக்க சிரிக்க : எது ஈன்றது? எது குட்டி போட்டது?



சிரிக்க சிரிக்க-69
http://www.muthukamalam.com/picture/cow1.jpg
காளமேகப் புலவர் கும்பகோணத்தில் ஓர் அன்ன சத்திரத்திலே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அவர் எதிரில் முன் குடுமிச் சோழியப் பிராமணர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

எதிரில் சாப்பிடும் அந்த சோழியப் பிராமணருக்கு சாப்பிடுவதில் வேகம் இருந்தது. அவர் குடுமி அவிழ்ந்து அன்னத்தில் விழுந்தும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அவர் சாப்பிடும் வேகத்தில் அந்தக் குடுமியை வேகமாகத் தள்ளினார்.

அந்தக் குடுமியில் ஒட்டியிருந்த அன்னம் காளமேகப் புலவரின் இலையில் வந்து விழுந்தது.

புலவருக்குக் கடும் கோபம். உடனே தொடங்கினார்.

சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்
பெருக்குலர்ந்த வாயா புலையா - திருக்குடந்தைக்
கோட்டானே நாயே குரங்கே உனைஒருத்திப்
போட்டாளே வேலையற்றுப் போய்

இங்கு புலவர் பெற்றாளே என்று பாடவில்லை. ஏ குரங்கே, நாயே என்றால் போட்டாளேஎன்றுதான் பாட வேண்டும்.

இங்கு ஒரு நுட்பத்தைக் கவனிக்க வேண்டும்.

பன்றியும் விலங்கு, நாயும் விலங்கு, மாடும் விலங்கு. எல்லாம் விலங்குதான். பசு கன்று ஈன்றது என்கிறோம். ஆனால் நாய் குட்டி போட்டது என்கிறோம். ஏன்?

ஒன்றே ஒன்று போட்டால் ஈன்றது. ஐந்து ஆறு என்றால் போட்டால் அது குட்டி போட்டது.

ரயிலில் ஒரு பெண் ஒரு குழந்தை வைத்திருந்தால் உன் குழந்தையா? என்பார்கள். அதே சமயம் நான்கைந்து இருந்தால் குட்டிகளா என்று கேட்பார்கள்.
-வாரியார் எழுதிய செஞ்சொல் உரைக்கோவைநூலிலிருந்து.
http://www.muthukamalam.com/picture/smile%20boy.jpg