Wednesday, October 9, 2013

சிரி... சிரி... அக்.05

சிரி... சிரி...

 ""இந்த நாய் ஏன் ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு?''
""இந்த நாயோட எஜமான் தனது மகளிடம், இந்த நாய்க்கு வேணும்னா உன்னைக் கட்டி வைப்பேன். உன் காதலனுக்குக் கட்டி வைக்கமாட்டேன்னு சொன்னாராம்''
எஸ்.கிருஷ்ணன், திருவண்ணாமலை.

""ஏங்க உங்க பையன் சதா குடிச்சிட்டு திரியறான். கேட்கப்படாதா?''
""கேட்க வேண்டிய அவசியமே இல்லை. என் கோட்டாவா தினமும் ஒரு குவார்ட்டர் குடுத்திடுவான்''

""பரீட்சை ஹாலில் ஓராளு வந்து ஒரு விரலைத் தூக்கிக் காட்டிட்டு போறாரே எதுக்கு?''
""கேள்வித்தாள் அவுட்டாம்''

""நேத்து இண்டர்வியூ நடந்திட்டிருக்கும்போதே தூங்கிட்டேன்''
""அய்யய்யோ... அப்புறம்?''
""உடனே அப்பாயின்மென்ட் குடுத்து வேலையில சேரச் சொல்லிட்டாங்க''

""பட்டிமன்ற பேச்சாளர்கள் எல்லாரும் ஏன் வயதான பாட்டிகளா இருக்காங்க?''
""இது ஒரு புது முயற்சியாம். இதுக்குப் பேர் பாட்டி மன்றமாம்''

""கண்ணு சுத்தமா தெரியலை... டாக்டரை பார்க்கணும்''
""கண்ணு தெரியலைன்னு சொல்லுறீங்க. அப்ப டாக்டரை எப்படிப் பார்ப்பீங்க?''

""தலைவரோட மேடை பேச்சுல நகைச்சுவை தெறிச்சுதாமே? ''
""ஆமாம்... ஊழலை ஒழிப்போம். சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்போம்ன்னு ஒரே காமெடி போங்க''

""பழனி மலையிலே ஏற்பட்ட ரேப் கார் விபத்தை நான் கண்டிக்கிறேன்''
""தலைவரே... அது ரேப் கார் இல்லே. ரோப் கார்''
கு.அருணாசலம், தென்காசி.

No comments:

Post a Comment